தமக்கு எதிரான சட்ட அச்சுறுத்தலை ஜனாதிபதி வேட்பாளர் ஆனந்த சாகர தேரர் ஏற்றுள்ளார்
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார, தமக்கு எதிராக கோரியுள்ள 500 பில்லியன் ரூபாய் நட்டஈடு என்ற தமக்கு எதிரான சட்ட அச்சுறுத்தலை ஜனாதிபதி வேட்பாளர் ஆனந்த சாகர தேரர் ஏற்றுள்ளார்.
இந்தநிலையில் தம்மை மிரட்டி தமது அறிக்கைகளை மீளப்பெறச் செய்யலாம் என மனுஷ நாணயக்கார நம்பினால், அது தவறானது. அவரை நீதிமன்றில் சந்திக்க தாம் தயாராக உள்ளதாக, ஜனாதிபதி வேட்பாளர் ஆனந்த சாகர தேரர் தெரிவித்துள்ளார்.
உடனடியாக விசாரணைகள்
மூன்று பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பிக்குகள் கூட்டமைப்பைச் சேர்ந்த பஹியங்கல ஆனந்த சாகர தேரர், ஏற்கனவே வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு எதிராக பல மோசடிகள் மற்றும் முறைகேடுகள் உட்பட்ட கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இம்மாதம் 3ஆம் திகதி மிகிந்தல ரஜ மகா விகாரைக்கு விஜயம் செய்த பெண் ஒருவர், தனது தனிப்பட்ட அனுபவத்தை தேரரிடம் பகிர்ந்துகொண்டதை அடுத்தே தேரர், அந்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

அத்துடன் பலர் இதே போன்ற பிரச்சினைகளை வெளிப்படுத்தியுள்ளதாக தேரர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டவுடன் உடனடியாக விசாரணைகளை, முன்னெடுக்க வேண்டும் என்று அவர் எதிர்க்கட்சி தலைவரிடம் வலியுறுத்தியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
என்னை நிம்மதியா விடு, எதாவது பண்ணிக்க போறேன்.. சின்னமருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ Cineulagam
கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா News Lankasri
முடிவுக்கு வரும் ஈரான் போர் நிறுத்தம்... மத்திய கிழக்கில் படைகளைக் குவிக்கும் அமெரிக்கா News Lankasri