ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி பிறப்பித்துள்ள முக்கிய பணிப்புரை
ஆளும் கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் இன்றைய தினமும், நாளைய தினமும் கொழும்பில் தங்கியிருக்க வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளார்.
எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் விவாத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் இன்றும், நாளையும் ஆளும் கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் கொழும்பில் தங்கியிருக்க வேண்டுமென கோரப்பட்டுள்ளது.
கொழும்பில் தங்கியிருந்து விவாதத்தில் பங்கேற்று நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடிக்க பூரண ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவளிக்க அனைத்து ஆளும் கூட்டணி கட்சிகளும் தீர்மானித்துள்ளன.