மாகாண சபைக்கு அதிகாரங்களை வழங்க மிக அக்கறையுடன் செயல்பட்டு வரும் ஜனாதிபதி - அரவிந்தகுமார் (Photos)

Ministry of Education Batticaloa Ranil Wickremesinghe A. Aravind Kumar
By Navoj Jul 24, 2023 12:18 PM GMT
Report

13-வது திருத்தச் சட்டத்தை முற்றாக நடைமுறைப்படுத்தி  மாகாண சபைக்கு அதிகாரங்களை வழங்க வேண்டும் என தற்போதைய ஜனாதிபதி மிக அக்கறையுடன் செயல்பட்டு வருகின்றார் என கல்வி ராஜாங்க அமைச்சர் ஏ.அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு வாகரை கதிரவெளி விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் நூற்றாண்டு விழா பாடசாலை அதிபர் ஏ.அரசரத்தினம் தலைமையில் இடம்பெற்ற போது பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மாகாண சபைகள் அமைக்கப்பட்டதே வடகிழக்கு மக்களுக்கான பிரச்சனைகளை தீர்ப்பதற்காகவே, ஆனால் மாகாண சபையில் உள்ளவர்களே, நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டு மாகாண சபையின் அதிகாரங்களை குறைக்க வேண்டும் எனும் இரட்டை நிலைப்பாட்டில் உள்ளனர்.

அதிகரித்த அதிகாரங்கள்

மாகாண சபைக்கு அதிகாரங்களை வழங்க மிக அக்கறையுடன் செயல்பட்டு வரும் ஜனாதிபதி - அரவிந்தகுமார் (Photos) | President Working Diligently Provincial Council

முன்பு இருந்ததை விட தற்போது மாகாண சபைக்கு அதிக  அதிகாரங்கள் உள்ளதாகவே காணப்படுகின்றது.அதனை சிறிது சிறிதாக அதிகரித்துக் கொள்ள திட்டங்களை வகுக்க வேண்டும். மாகாண சபைகள் தொடர்ச்சியாக இயங்கி வந்திருந்தால் இன்று அதிகாரங்களைக் கொண்டதாக மாகாண சபைகள் காணப்பட்டிருக்கும்.

நாம் நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் கொண்டு வருவதாயின் மாகாண சபையின் அங்கீகாரம் பெற வேண்டிய அளவுக்கு தற்போது அதிகாரங்கள் வலுப்பெற்றுள்ளன. தற்போதைய ஜனாதிபதி மாகாண சபைக்கு அதிகாரங்களை வழங்கி அவற்றை சுயாதீனமாக இயங்கச் செய்வதே அவரது நிலைப்பாடாகும்.

நாடாளுமன்றத்தின் சுமைகளை குறைப்பதற்கு இந்த மாகாண சபைகள் சிறப்பாக இயங்க வேண்டும் என்பதே அவரின் நிலைப்பாடு எனவும் கூறினார்.

கல்வி அபிவிருத்திக்கான நிதி

மாகாண சபைக்கு அதிகாரங்களை வழங்க மிக அக்கறையுடன் செயல்பட்டு வரும் ஜனாதிபதி - அரவிந்தகுமார் (Photos) | President Working Diligently Provincial Council

இப்பாடசாலை சமூகத்தில் போதைப் பொருள் பாவனை அற்றதாகக் காணப்படும் செய்தி மிகவும் மகிழ்ச்சி அடைய செய்வதாகவும் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தற்போது சிறிது சிறிதாக மாறி வருவதுடன் நல்ல இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றது.

அடுத்த வருடம் கல்வி அபிவிருத்தி பணிகளுக்காக நிதிகள் ஒதுக்கப்படும் என நம்பிக்கை எமக்கு உள்ளது.

மாகாண சபைக்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதில் தற்போதைய ஜனாதிபதி மிக அக்கறையுடன் செயல்பட்டு வருகின்றார் என்றார்.

திறப்பு விழா

மாகாண சபைக்கு அதிகாரங்களை வழங்க மிக அக்கறையுடன் செயல்பட்டு வரும் ஜனாதிபதி - அரவிந்தகுமார் (Photos) | President Working Diligently Provincial Council

பாடசாலை சமூகத்தினரால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நுழைவாயில் கட்டிடத்தை அமைச்சர் திறந்து வைத்ததுடன்,இப்பாடசாலையின் நூற்றாண்டு சிறப்பு மலரான கதிராளியும்  வெளியிட்டு வைக்கப்பட்டது.

இப்பாடசாலையில் கடந்த காலங்களில் சிறப்பு திறமைகளை காட்டிய மாணவர்கள் அதிதிகளால் கௌரவிக்கப்பட்டனர்.

இப்பிரதேச கலை கலாச்சாரங்களை எடுத்துரைக்கும் வகையில் கலை நிகழ்வுகளும் இங்கு இடம்பெற்றதுடன், அமைச்சரினால் கடந்த ஆண்டு கல்வி பொது சாதாரண தரப்பரீட்சையில் ஒன்பது திறமை சித்திகளை பெற்ற மாணவன் ஒருவருக்கு அமைச்சரினால் தனது சொந்த நிதியிலிருந்து பத்தாயிரம் ரூபாய் பண பரிசு வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்விற்கு இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன்,வாகரை பிரதேச செயலாளர் ஜி.அருணன் ,கல்குடா வலயக்கல்வி உயர் அதிகாரிகள், பாடசாலையின் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும்  நூற்றாண்டு விழா நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


GalleryGalleryGallery
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Scarborough, Canada

11 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வெள்ளவத்தை

12 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

12 Sep, 2010
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்.பாஷையூர், Jaffna, பிரான்ஸ், France

10 Sep, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கிளாலி

11 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US