தேசிய மக்கள் சக்தியின் இறுதிக்கட்ட பிரசாரப் பணிகளில் இருந்து விலகிய ஜனாதிபதி
தேசிய மக்கள் சக்தியின் இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரப் பணிகளில் இருந்து ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க விலகிக் கொண்டுள்ளார்.
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் பிரசாரப் பணிகளில் தேசிய மக்கள் சக்தி சார்பில் நாடளாவிய ரீதியில் நடைபெற்ற பல்வேறு பிரச்சாரக்கூட்டங்களில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கலந்து கொண்டிருந்தார்.
இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதிநாளான இன்றைய தினம் தேசிய மக்கள் சக்தி சார்பில் நாடளாவிய ரீதியில் பல்வேறு பிரச்சாரக்கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போதும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவற்றில் கலந்து கொள்ள மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இறுதிப் பிரசாரக்கூட்டம் இல்லை
அத்துடன் தேர்தல் பிரசாரப் பணிகளை நிறைவுசெய்யும் வகையிலான இறுதிப்பிரச்சாரக் கூட்டமொன்றை நடத்தும் வழக்கத்தையும் தேசிய மக்கள் சக்தி இம்முறை கைவிட்டுள்ளது.
அதன் பிரகாரம் தேசிய மக்கள் சக்தி சார்பில் இறுதிப் பிரசாரக்கூட்டம் எதுவும் நடைபெறாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 10ஆம் நாள் மஞ்சத்திருவிழா





ஐ.நா ஒப்பாரி மண்டப நாட்டாமைக்கு ஈழத் தமிழரின் கடிதம் 16 மணி நேரம் முன்

கனடா நிலப்பரப்புக்கு அடியில் உறங்கிக்கொண்டிருக்கும் பயங்கர அபாயம்: எச்சரிக்கும் ஆய்வாளர்கள் News Lankasri

நடிகர் சூர்யாவின் பிள்ளைகள் தனது Pocket-Money-யை என்ன செய்கிறார்கள்? சித்தப்பா கார்த்தி கூறிய உண்மை Manithan

நடிகை ரம்யா கிருஷ்ணன் மகனா இது, லேட்டஸ்ட் போட்டோ... எங்கே சென்றுள்ளார் பாருங்க, வைரல் போட்டோ Cineulagam
