ரணில் விக்ரமசிங்க உறுதிப்படுத்த வேண்டிய விடயங்கள் தொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் கோரிக்கை

United Human Rights Ranil Wickremesinghe Sri Lanka Economic Crisis Sri Lankan political crisis
By Sivaa Mayuri Aug 09, 2022 03:27 AM GMT
Sivaa Mayuri

Sivaa Mayuri

in அரசியல்
Report

இலங்கையின் புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அனைத்து இலங்கையர்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை தனது நிர்வாகம் மேற்கொள்வதை உறுதிப்படுத்த வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரியுள்ளது.

கண்காணிப்பகத்தின் தெற்காசியப் பணிப்பாளர் மீனாட்சி கங்குலி இன்று வெளியிட்டுள்ள கடிதத்தில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தமது கடிதத்தில் முக்கிய மனித உரிமை கவலைகளை தெற்காசியப் பணிப்பாளர் மீனாட்சி கங்குலி கோடிட்டுக் காட்டியுள்ளார்.

அரசியல், பொருளாதார மற்றும் மனித உரிமைகள் நெருக்கடி

பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட தவறான நிர்வாகம் மற்றும் உரிமை மீறல்களைத் தொடர்ந்து இலங்கை அரசியல், பொருளாதார மற்றும் மனித உரிமைகள் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.

ரணில் விக்ரமசிங்க உறுதிப்படுத்த வேண்டிய விடயங்கள் தொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் கோரிக்கை | President Wickremesinghe Needs To End Crackdown

இந்த நிலையில் பொருளாதார முறைகேடு மற்றும் ஊழலுக்கு எதிரான பல மாதங்களாக இடம்பெற்ற பரவலான எதிர்ப்புகளுக்குப் பின்னர் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பதவி விலகியதை அடுத்து 2022 ஜூலை 21அன்று விக்ரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்றார்.

அவர், கருத்துச் சுதந்திரம் ஒன்றுகூடல் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பளித்து பாதுகாப்பு படைகளின் துஷ்பிரயோகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அதேவேளையில் தகுந்த சமூகப் பாதுகாப்புக் கொள்கைகளை வகுத்து நிலவும் ஊழலைக் கையாள்வதன் மூலம் பொதுமக்களை மேலும் சிரமங்களிலிருந்து பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று மீனாட்சி கங்குலி கோரியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க உறுதிப்படுத்த வேண்டிய விடயங்கள் தொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் கோரிக்கை | President Wickremesinghe Needs To End Crackdown 

ஜனாதிபதி விக்ரமசிங்க பாரிய சவால்களை எதிர்கொள்கிறார். எனினும் கடுமையான அவசரகாலச் சட்டங்களை விதிப்பது, போராட்டத் தலைவர்களை அரசியல் ரீதியாக கைது செய்தல் மற்றும் செயற்பாட்டாளர் குழுக்கள் மீது தீவிர கண்காணிப்பு ஆகியவை இலங்கையின் பயங்கரமான பிரச்சினைகளைத் தீர்க்காது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசியப் பணிப்பாளர் மீனாட்சி கங்குலி தெற்காசியப் பணிப்பாளர் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார்.

நெருக்கடிக்கான மூல காரணங்களை நிவர்த்தி செய்தல்

இலங்கை அரசாங்கம் மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியை கடைப்பிடித்து நெருக்கடிக்கான மூல காரணங்களை நிவர்த்தி செய்தால் மட்டுமே சர்வதேச பொருளாதார உதவி பயனுள்ளதாக இருக்கும் என்பதில் இலங்கையின் பங்காளி நாடுகள் தெளிவான உள்ளன.

எனவே மனித உரிமைகளுக்கு மதிப்பளித்து செயற்படுமாறு கோரியுள்ள மீனாட்சி கங்குலி, ஜனாதிபதி விக்ரமசிங்கவுக்கு பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளார்.

• பழிவாங்கல் அல்லது கைதுக்கு அஞ்சாமல் மக்கள் தங்கள் கருத்துக்களை சுதந்திரமாகவும், அமைதியாகவும் வெளிப்படுத்த முடியும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

• தெளிவற்ற அடிப்படை உரிமைகளை மீறும் அவசரகால ஒழுங்குமுறை விதிகளைத் திரும்பப் பெற வேண்டும்.

• பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் இயற்றப்படும் வரை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தன்னிச்சையாக தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுவிக்க வேண்டும்.

• பொருளாதார நெருக்கடியின் விளைவுகளிலிருந்து அனைவரின் உரிமைகளையும் பாதுகாக்க தவறான நிர்வாகம் மற்றும் ஊழலைத் தடுக்க புதிய சமூக பாதுகாப்பு அமைப்பை நிறுவ வேண்டும்.

ரணில் விக்ரமசிங்க உறுதிப்படுத்த வேண்டிய விடயங்கள் தொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் கோரிக்கை | President Wickremesinghe Needs To End Crackdown

• உலக வங்கி மற்றும் ஐக்கிய நாடுகளின் கூட்டுடன் ஊழல் நிதிகளுக்கான பாதுகாப்பை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், இலங்கையில் இருந்து திருடப்பட்ட சொத்துக்களை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

• கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் உயர்மட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் மீது சுயாதீனமான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்தி அதற்குப் பொறுப்பானவர்களை உரிய முறையில் தண்டிக்க வேண்டும்.

இதேவேளை நாட்டில் சீர்திருத்தம் ஊழலுக்கான பொறுப்புக்கூறல் மற்றும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவே பல இலங்கையர்கள் தைரியமாக தெருக்களில் இறங்கினர்.

எனவே போராட்டக்காரர்களை அமைதிப்படுத்த முயற்சிப்பதற்குப் பதிலாக ஜனாதிபதி விக்ரமசிங்க சொல்வதைக் கேட்க வேண்டும் என்று மீனாட்சி கங்குலி வலியுறுத்தியுள்ளார்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

25 Nov, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, Ajax, Canada

25 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், நீர்கொழும்பு

21 Nov, 2025
மரண அறிவித்தல்

சரசாலை தெற்கு, அல்லாரை

22 Nov, 2025
மரண அறிவித்தல்

பொன்னாலை, Deuil-la-Barre, France

18 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, பரிஸ், France, கனடா, Canada

26 Nov, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

19 Nov, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வாரிவளவு, காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

25 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, பேர்ண், Switzerland

18 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், Woodbridge, Canada

22 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, சூரிச், Switzerland

07 Dec, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Scarborough, Canada, Oshawa, Canada

16 Nov, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், அப்புத்தளை

02 Dec, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US