ஜனாதிபதியின் லண்டன் விஜயம்:குமார வெல்கம வெளியிட்டுள்ள கவலை
ஐக்கிய இராச்சியத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பெருமளவான தூதுக்குழுவுடன் சென்றமை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம கவலை வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று(20.09.2022) உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,“தேவையற்ற செலவுகளை குறைக்க மூன்று பேர் கொண்ட பிரதிநிதிகளை, ஜனாதிபதி தன்னுடன் அழைத்துச் சென்றிருக்க வேண்டும்.
குமார வெல்கம கவலை

ஜனாதிபதி விக்ரமசிங்க ஏன் ஐக்கிய இராச்சியத்திற்கு தம்முடன் சுமார் பத்து பிரதிநிதிகளை அழைத்து சென்றார்?
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் சிராந்தி ராஜபக்ச ஆகியோர் தமது
பயணங்களின் போது அவர்களுடன் ஒரு பெரிய குழுவை அழைத்துச் சென்றதன் காரணமாகவே
இன்று நாடு நெருக்கடியை எதிர்கொள்கின்றது.”என கூறியுள்ளார்.
"I am coming".. பல தடைகளை தாண்டி வெளியாகும் ஜனநாயகன்.. ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு.. Cineulagam
ஓங்கும் உக்ரைன் கை... மூழ்கடிக்கப்பட்ட ரஷ்ய இராணுவக் கப்பல்: தீவிரமடையும் எரிபொருள் நெருக்கடி News Lankasri