ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய வவுனியாவில் 5 பேருக்குத் தடை உத்தரவு (Photos)
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை வவுனியாவிற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், குறித்த பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்ய 5 பேருக்கு வவுனியா நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் இன்றைய தினம் (04.01.2024) வவுனியா நீதிமன்றில் முன்வைத்த முறைப்பாட்டின் அடையில் இத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் தடை உத்தரவு
அதன்படி, ஜனாதிபதி 5 ஆம் திகதி அரச கடமைகளில் ஒன்றான மாவட்ட அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடுவதற்கு வருகை தரவுள்ளார். அதில் அரச அதிகாரிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதன்போது குறித்த பகுதியில் அமைதியின்மையை ஏற்படுத்தவும், வீதியை மறித்து அல்லது அப்பகுதியை மறித்து குழப்பும் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் 5 பேருக்கு எதிராகவும், அவர்களது அமைப்புக்களுக்கு எதிராகவும் பொலிஸார் தடை உத்தரவு கோரியிருந்தனர்.
அதனை கவனத்தில் எடுத்த மன்றும் நேற்று (03) இரவு 12 மணி முதல் நாளை (05) இரவு 12 மணிவரை அதனடிப்படையில் இந்த தடை உத்தரவானது காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கங்களைச் சேர்ந்த கோ.ராஜ்குமார், கா.ஜெயவனிதா, ஜெனிற்றா, சரோஜினிதேவி மற்றும் முன்னாள் முன்னாள் அரசியல் கைதியும், போராளிகள் நலன்புரி சங்கத்தின் வவுனியா மாவட்ட தலைவருமான அரவிந்தன் ஆகியோருக்கே பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த தடை உத்தரவு பொலிஸாரால் சம்மந்தப்பட்டவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

வருமான வரித் திணைக்களத்திற்கு நிதி அமைச்சு வழங்கியுள்ள இலக்கு : அதிகரிக்கும் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan

இந்த ராசியினர் மருமகளை மகளாகவே நடத்தும் தலைசிறந்த மாமியாராக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri
