வருமான வரித் திணைக்களத்திற்கு நிதி அமைச்சு வழங்கியுள்ள இலக்கு : அதிகரிக்கும் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை
தற்போது காணப்படும் 05 இலட்சத்து 196 தனியார் வரிக் கோவை எண்ணிக்கையை 01 மில்லியனாக அதிகரிக்கும் இலக்கை தேசிய வருமான வரி திணைக்களத்துக்கு நிதி அமைச்சு வழங்கியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அதிகரிக்கும் எண்ணிக்கை
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
வருமானவரி வழங்குவதற்காக பதிவு செய்யப்பட்டுள்ள வரிக்கோவை எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம், வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

உரிய முறையில் வரியை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதன் மூலம் வரிச்சுமை குறைவடையும் அதேவேளை, வரி அடிப்படையை விரிவுபடுத்த முடியுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
2019ஆம் ஆண்டு 17 இலட்சமாக தனியார் வருமான வரி கோவைகள் இருந்துள்ளது. இது 2021ஆம் ஆண்டு 05 இலட்சத்து 70 ஆயிரமாகக் குறைந்துள்ளது.

அதேவேளை 2022 ஆம் ஆண்டு 02 இலட்சத்து 04 ஆயிரத்து 467 ஆக இது குறைவடைந்துள்ளது. எனினும் 2023ஆம் ஆண்டு மீண்டும் அது 05 இலட்சம் வரிக்கோவையாக அதிகரித்துள்ளது.
அதற்கிணங்க இந்த வருடத்தில் அந்த வரிக்கோவை எண்ணிக்கையை 10 இலட்சமாக அதிகரிப்பதற்கு புதிய தேசிய வருமானவரி ஆணையாளர் சேபாலிகா சந்திரசேக்கர தலைமையிலான வருமானவரி திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு, பாரிய இலக்கு வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam
வளைகுடா நாடுகளில் இருந்து அதிகம் பணம் பெறும் இந்திய மாநிலங்கள் - தமிழ்நாடு எந்த இடத்தில்? News Lankasri
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam