ஜனாதிபதிக்கும், அமெரிக்க USAID பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், அமெரிக்க அரசாங்கத்தின் சர்வதேச அபிவிருத்திக்கான நிதியளிப்பு நிறுவனமான (USAID) பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
இதன்போது இன்று இலங்கையில் இடைநிறுத்தப்பட்டுள்ள சில மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளன.
USAID நிறுவனத்தினால் நிதியளிக்கப்பட்ட பல மேம்பாட்டு நடவடிக்கைகள் ஏற்கனவே நாட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த திட்டங்களில் பல சில காரணங்களால் இன்னும் செயலற்ற நிலையில் உள்ளன.
இந்நிலையில் இரு தரப்பினரும் தாமதத்திற்கான காரணங்களைப் பற்றி விவாதித்ததுடன், மேம்பாட்டுப் பணிகளை விரைவாக முடிக்க இணக்கம் வெளியிட்டதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து இலங்கையில் USAID நிதியுதவி பெற்ற மேம்பாட்டுத் திட்டங்களை விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் இப்போது எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை இடம்பெற்ற இந்த சந்திப்பில் USAIDஇன் இலங்கை அலுவலக இயக்குனர் ரீட் ஜே.ஏஷ்லிமென் உட்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்.