தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக கோட்டபாய கூறியமை நகைப்புக்கிடமானது- அருட்தந்தை மா.சத்திவேல்

United nation Gotapaya rajapaksa Political prisons
By Independent Writer Sep 22, 2021 08:14 AM GMT
Independent Writer

Independent Writer

in சமூகம்
Report

ஐ.நா கூட்டத் தொடருக்கு முன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச(Gotapaja rajapaksa) ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் அன்டோனியோ கோட்ரஸ்சை(Antonio Cotrus) சந்தித்து அரசியல் கைதிகளை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்வதாகக் கூறியமை நகைப்புக்கிடமானது என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் (Archbishop Ma.Sathivel) தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகளுடைய தற்போதைய நிலவரம் குறித்து இன்று (22) அவரால் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத் தொடருக்கு முன்னர் ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் அன்டோனியோ கோட்ரஸ்சுடன் மேற்கொண்ட பிரத்தியேக சந்திப்பின்போது அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளமை அரசியல் காய் நகர்த்தல் ஆக நாம் சந்தேகம் கொள்கின்றோம்.

அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் எதிர்க்கட்சி தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாகக் கடிதம் கொடுத்தும் அதற்கு உரிய பதில் அளிக்காதவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்திப்பதாகக் கூறி பின்னர் காலவரையறையற்று பிற்போட்டவர் ஐ.நா செயலாளரைச் சந்தித்து உள்நாட்டு பொறிமுறை ஊடாக பிரச்சினை தீர்ப்பதாகவும் அரசியல் கைதிகளை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்வதாகவும் கூறியமை நகைப்புக்கிடமானது.

ஏனெனில் நீண்ட காலமாகத் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை தொடர்பாக உள்நாட்டில் வாக்குறுதிகளைக் கொடுக்க முடியாதவர்கள் சர்வதேசத்திற்குச் சென்று வாக்குறுதிகள் கொடுக்கின்றார்கள் எனில் அதில் தங்களுடைய அரசியல் உள்நோக்கம் மட்டுமே தங்கியிருக்கும். அதற்காகவே தற்போதைய ஐ.நா கூட்டத்தொடரைப் பயன்படுத்துவதாகவே தோன்றுகிறது.

2009ஆம் ஆண்டு பாரிய இனப்படுகொலையுடன் இன அழிப்பை மேற்கொண்ட இராணுவத்தைப் பாதுகாக்கும் பேரினவாத நோக்கம் கொண்டே கடந்தகால ஆட்சியாளர்களும் தற்போதைய ஆட்சியாளர்களும் செயல்பட்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையில் இராணுவம் இழைத்த குற்றங்களையும் அந்த குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களைத் தண்டிக்கப்படக்கூடாது என்ற மனநிலையில் ஆட்சியாளர் இருப்பதையும் தமிழர்கள் அறிவார்கள்.

அதுமட்டுமல்ல யுத்த குற்றங்களுக்கெல்லாம் முழுமையாக பொறுப்புக்கூற வேண்டியவர்கள் தற்போதைய ஜனாதிபதியும், அவரை சூழ உள்ள இராணுவ உயர் நிலை அதிகாரிகளுமே. இவர்கள் தம்மைத் தண்டனைக்கு உள்ளாக்கப் போவதுமில்லை. இதனால்தான் உள்நாட்டு பொறிமுறை விடயத்தில் தமிழ் மக்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லாத நிலையில் வடகிழக்கில் ஐ.நா பிரதிநிதித்துவத்தை வேண்டி நிற்பதோடு பிரச்சினைக்கு நீதி தீர்வு சர்வதேச மத்தியஸ்தத்தின் தலையிட்டால் மட்டுமே கிடைக்குமென்ற நம்பிக்கையில் சர்வதேசத்தை நோக்கி நீதி குரல் எழுப்பிக் கொண்டிருக்கின்றனர்.

தமிழ் மக்கள் இனியும் இவர்களுடைய பசப்பு வார்த்தைகளுக்கோ சர்வதேசத்திற்குக் கொடுக்கின்ற வாக்குறுதிகளுக்கோ ஏமாறுவதற்கு ஆயத்தம் இல்லை. தற்போதைய ஆட்சியாளர்கள் இன அழிப்பு மட்டுமே தீர்வு என்று செயற்படுகின்றனர். தமிழர்களுக்குத் தீர்வும் கொடுக்கக் கூடாது என்பதுதான் பேரினவாத ஆட்சியாளர்களின் நிலைப்பாடு. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 16 அரசியல் கைதிகளை பொது மன்னிப்பின் கீழ் வீடுகளுக்கு அனுப்பி அரசியல் நாடகமாடினார்.

நீதிமன்ற நடவடிக்கைகளில் எதிர்வரும் மாதங்களில் வீடுகளுக்குச் செல்ல இருந்தவர்களையே பொதுமன்னிப்பின் கீழ் குற்றவாளிகள் ஆக்கப்பட்டு வீடுகளுக்கு அனுப்பினர். அதனையே ஐக்கிய நாடுகள் செயலாளரிடம் அரசியல் கைதிகளை விடுவித்ததாக மார்தட்டிக் கொண்டு அரசியல் பித்தலாட்டம் நடத்துகின்றனர்.

பதவிக்கு வந்த உடனேயே தனது அதிகாரத்தை அதிகரித்துக் கொள்வதற்காக அவசர அவசரமாக 20 ஆவது திருத்தத்தைக் கொண்டு வந்தவர்கள். மிக நீண்டகாலமாகச் சர்வதேச நாடுகளும் மனித உரிமை அமைப்புகளும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கோரிய பயங்கரவாத தடை சட்டத்தை அகற்றுவதற்குத் துணியவில்லை.

பயங்கரவாத தடைச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று கூறியபோதும் அதற்கும் எத்தகைய நடவடிக்கையையும் இல்லாதவர்கள் பயங்கரவாத தடை சட்டத்தைத் தொடர்ந்து பாதுகாத்துக் கொண்டு அச்சட்டத்தின் கீழ் கைதிகள் நடந்து கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் சட்டத்தைத் திருத்தி தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வது என்பது சர்வதேசத்தை ஏமாற்றுவதற்கான ஒரு உத்தி எனலாம்.

இரவிரவாக காணாமல் போனோர் அலுவலகம் திறப்பதும், காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்குச் சலுகைகளை அறிவிப்பதும், அரசியல் கைதிகளை விடுவிப்பது என்பதும் யுத்தக் குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களை மறைத்து தமிழ் மக்களின் எதிர்பார்ப்பார் நீதியைக் குழி தோண்டி புதைக்கும் செயலாகும்.

இனவாதம் பேசி ஆட்சியைக் கைப்பற்றி அவர்கள் இனவாதத்தைக் காவலர்களைப் பாதுகாப்பவர்கள் அடுத்த தேர்தலுக்கு முன்னர் வீழ்ந்து கொண்டிருக்கின்ற பொருளாதாரத்தைச் சமாளிக்கத் தமிழர் பிரச்சினையை தமக்கு சாதகமாய் சர்வதேச அரங்கில் பயன்படுத்த முனைவது இன அழிப்பின் நீட்சிக்கே என தெரிவிக்கப்பட்டுள்ளது.

12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Ajax, Canada

06 Jun, 2025
மரண அறிவித்தல்

குருநகர், Scarborough, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய், கம்பளை, Toronto, Canada, Markham, Canada

30 Apr, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், பரிஸ், France

31 May, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

21 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, பிரான்ஸ், France

09 Jun, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

12 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொழும்பு

05 Jun, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பெரியவிளான், Mississauga, Canada

03 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
நன்றி நவிலல்

கோண்டாவில் கிழக்கு, கொழும்பு, New Jersey, United States, Winnipeg, Canada

28 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom, அரியாலை

19 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Köln, Germany

04 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, கனடா, Canada

06 Jun, 2020
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு கிழக்கு, Jaffna, நெடுந்தீவு, வவுனியா, Montreuil, France

31 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US