நாடாளுமன்ற தேனீர் விருந்துக்கு 2 லட்சத்து 72 ஆயிரம் ரூபாவை செலவு செய்த ரணில்!
நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத் தொடர் ஆரம்பமான பின்னர் நாடாளுமன்ற உணவகத்தில் நடைபெற்ற தேனீர் விருந்து செலவுக்கான பணத்தை ஜனாதிபதி தனது சொந்த பணத்தில் இருந்து செலுத்தியதாக ஜனாதிபதியின் நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பான ஆலோசகர் பேராசிரியர் ஆஷூ மாரசிங்க தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையின் அன்றைய தேனீர் விருந்துக்கு 2 லட்சத்து 72 ஆயிரம் ரூபா செலவாகியதுடன் அந்த செலவுக்கான பணத்தை ஜனாதிபதி தனது சொந்த பணத்தில் செலுத்தியுள்ளார்.
கஷ்டமான காலத்தில் அரச செலவுகளை குறைக்க வேண்டும் என்ற ஜனாதிபதி நோக்குக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மாரசிங்க கூறியுள்ளார்.