ஜனாதிபதி ரணிலுக்கு சிறிது காலத்தை வழங்க வேண்டும்:வஜிர அபேவர்தன
ஒரு வருடமாக கண்களில் புலப்படாத எரிவாயு,இரண்டு ஆண்டுகளாக காணக்கிடைக்காத இரசாயன பசளை என்பன தற்போது சிறிது சிறிதாக மீண்டும் கண்ணுக்கு தென்பட ஆரம்பித்துள்ளதாக தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஆறு மாதங்களுக்கு சிக்கல் இல்லாமல் நாட்டை முன்னெடுத்துச் செல்ல இடமளிக்க வேண்டும்

இதனால், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆறு மாதங்கள் எந்த சிக்கலும் இல்லாமல் நாட்டை முன்னெடுத்துச் செல்ல இடமளிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் தொழிற்சங்கங்கள் பதாகைகளை ஏந்தினால், மீண்டும் டீசல், பெட்ரோல் இல்லாமல் போகும். இதனால், இளம் தலைமுறையினரின் எதிர்காலமே அழிந்து போகும். தொழிற்சங்கங்களுக்கு உரிமைகள் இருக்கின்றன.
நாடு தற்போது வீழ்ச்சியடைந்து வங்குரோத்து நிலையில் உள்ளது

எனினும் தற்போது இருப்பது வீழ்ச்சியடைந்த வங்குரோத்து நாடு என்பதை அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும். ரணில் விக்ரமசிங்கவுக்கு மாத்திரமல்லாது நாடும் அணியும் ஆடைகள் கூட இழந்த சந்தர்ப்பத்திலேயே அவர் ஜனாதிபதியாக பதவிக்கு வந்தார்.
ரணிலும் சிறிது வாய்ப்பை வழங்கினால் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் பிரச்சினை தீர்ந்து நாடு மீண்டும் சுபிட்சமான நிலைமைக்கு வரும் எனவும் வஜிர அபேவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan