வாக்காளர்கள் மீது அழுத்தம் பிரயோகிக்கும் ஜனாதிபதியின் அறிவிப்பு! பெப்ரல் கண்டனம்
உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான ஜனாதிபதியின் அறிவிப்பு வாக்காளர்கள் மீது மறைமுக அழுத்தம் பிரயோகிக்கும் செயற்பாடாகும் என்று பெப்ரல் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் நிர்வாகத்தின் கீழ் வராத உள்ளுராட்சி மன்றங்களின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு நிதி ஒதுக்கப்பட மாட்டாது என்று அண்மைக்காலமாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அடிக்கடி தெரிவித்து வருகின்றார்.
பெப்ரல் அமைப்பின் அறிக்கை
இந்தக் கருத்து வாக்காளர்கள் மீது மறைமுக அழுத்தம் பிரயோகிக்கும் வகையிலும், தேர்தல் சட்டங்களின் 82வது சரத்தை மீறும் வகையிலும் அமைந்துள்ளதாக சுயாதீன தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் அமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது.
நேர்மையான தேர்தல்கள். நடுநிலையான ஆட்சி முறை குறித்துப் பேசியவர்களே இவ்வாறு நடந்து கொள்வது கவலையைத் தருவதாகவும் பெப்ரல் அமைப்பின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |