ஜனாதிபதி ரணில் வெற்றி பெற்றால் இவரே பிரதமர்..! வஜிர அபேவர்தன பகிரங்கம்
இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் (Ranil Wickremesinghe) வெற்றி பெற்றால், தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்தனவே தொடர்ந்தும் பிரதமராக பதவி வகிப்பார் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன (Vajira Abeywardena) தெரிவித்துள்ளார்.
1982 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மறைந்த ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன வெற்றிபெற்ற போது, பிரேமதாசவே தொடர்ந்தும் பிரதமராக இருந்தார்.
ஜனாதிபதித் தேர்தல்
1999ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க வெற்றிபெற்ற போது மறைந்த ரத்னசிறி விக்ரமநாயக்க பிரதமராக இருந்தார்.
1999 இல் குமாரதுங்க தனது இரண்டாவது அமைச்சரவையை அமைத்த பின்னரும் விக்ரமநாயக்க பிரதமராகத் தொடர்ந்தார்.
எனவே, ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பதவிக்கு வரும் ஜனாதிபதியின் கீழ் வரும் பிரதமர், அதே பதவியில் தொடர்வது வழமையாகும் என்று அபேவர்த்தன கூறியுள்ளார்

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 1 மணி நேரம் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
