மகாராணியின் இறுதிச் சடங்கில் ஜனாதிபதி கலந்துக்கொண்டமை நாட்டுக்கு முக்கியமானது-வஜிர அபேவர்தன
நாட்டில் பிரச்சினைகள் இருந்தாலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரித்தானியாவின் இரண்டாவது எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்து்ககொண்டது நாட்டுக்கு மிக முக்கியமானது என ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
மகாராணிக்கு முடிச்சூடும் வைபவத்தில் கலந்துக்கொண்ட ஜனாதிபதியின் பெற்றோர்

எலிசபெத் மகாராணிக்கு முடிச்சூட்டும் அரச வைபவத்தில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தாயும் தந்தையும் கலந்துக்கொண்டனர்.
இதனடிப்படையில் அவரது இறுதிச் சடங்களில் ஜனாதிபதி கலந்துக்கொண்டமை இல்ஙகைக்கு மிகவும் முக்கியமானது.
இலங்கைக்கும் அரசர்களின் வரலாறு உள்ளது

இலங்கைக்கு அரசர்களின் வரலாறு இருந்துள்ளது.எனினும் அந்த அரச பரம்பரைகள் அப்போதே முடிவுக்கு வந்து விட்டன. இலங்கை முற்றிலும் ஜனநாயக நாடாக பரிமாணம் பெற்றுள்ளது.
முன்னேறிய நாடுகளை நோக்கும் போது அந்நாடுகள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமையாக செயற்படுகின்றன. ஆனால், இலங்கை எவ்வாறு செயற்படுகிறது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும் எனவும் வஜிர அபேவர்தன மேலும் கூறியுள்ளார்.
விஜய்யை பார்க்காமல் செல்ல மாட்டேன் - உத்தரபிரதேசத்தில் இருந்து 2,700 கி.மீ நடந்து வந்த இளைஞர் News Lankasri
ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்த கட்டா குஸ்தி 2 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா.. இதோ Cineulagam
தமிழ்நாட்டில் அதிக முறை 100 கோடி வசூல் செய்த நடிகர் யார் தெரியுமா? விஜய்யா அல்லது ரஜினியா? Cineulagam