நாடாளுமன்றில் ஆரம்ப அமர்வை எளிமையாக நடத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை..!

Parliament of Sri Lanka Anura Kumara Dissanayaka Government Of Sri Lanka President of Sri lanka
By Sivaa Mayuri Nov 21, 2024 03:10 AM GMT
Sivaa Mayuri

Sivaa Mayuri

in அரசியல்
Report
Courtesy: Sivaa Mayuri

இலங்கையின் (Sri Lanka) பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று  (21) ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதற்கான ஒத்திகை நேற்று (20) நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.

இன்று முற்பகல் 9.55 மணிக்கு வாக்கழைப்பு மணி ஒலிக்கப்பட்டு முற்பகல் 10.00 மணிக்கு நாடாளுமன்ற அமர்வு ஆரம்பிக்கப்படவிருக்கிறது

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கம் : விடுக்கப்பட்ட எச்சரிக்கை

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கம் : விடுக்கப்பட்ட எச்சரிக்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆசன ஒதுக்கீடு 

இதன்படி, செங்கோல் சபா மண்டபத்தில் வைக்கப்பட்டதும், நாடாளுமன்றத்தைக் கூட்டும் ஜனாதிபதியின் பிரகடனத்தை நாடாளுமன்ற செயலாளர் நாயகம் சபையில் வாசிப்பார்.

நாடாளுமன்றில் ஆரம்ப அமர்வை எளிமையாக நடத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை..! | President Opening Session In A Simple Manner

முதலாவதாக சபாநாயகரின் தெரிவு இடம்பெறவிருக்கிறது. இதன்போது, அரசியலமைப்பின் 64 (1) பிரிவு மற்றும் நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகள் 4,5 மற்றும் 6 இன் ஏற்பாடுகளுக்கு அமைய சபாநாயகர் ஒருவரை வாக்கெடுப்பின் மூலம் தெரிவுசெய்தல், சபாநாயகரின் பதவிப்பிரமாணம் அல்லது உறுதியுரை, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிப்பிரமாணம் அல்லது உறுதியுரை, பிரதிச் சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதித் தவிசாளர் வாக்களிப்பினால் தெரிவு செய்தல் என்பன இடம்பெறும்.

முதலாவது நாளில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆசன ஒதுக்கீடு மேற்கொள்ளப்படாது என்பதால் தமக்கு விரும்பிய ஆசனங்களில் அமர முடியும்.

இந்தச் செயற்பாடுகள் முடிவடைந்ததும் நாடாளுமன்றம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு அரசியலமைப்பின் 32(4) மற்றும் 33 சரத்துக்களுக்கு அமைய, தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய முற்பகல் 11.30 மணிக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அக்கிராசனத்தில் அமர்ந்து அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையை நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளார்.

ஜனாதிபதியின் வருகை

இந்தநிலையில் பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் ஆரம்ப நிகழ்வை, எளிமையான முறையில் நடத்துமாறு ஜனாதிபதி வழங்கிய பணிப்புரைக்கு அமைய, நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்கு அமைய ஜயமங்கள கீதம், முப்படையினரின் அணிவகுப்பு, மரியாதை வேட்டுக்கள் தீர்த்தல் மற்றும் வாகனப் பவனி என்பன இடம்பெறாது என படைக்கல சேவிதர் குசான் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் ஆரம்ப அமர்வை எளிமையாக நடத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை..! | President Opening Session In A Simple Manner

இதேவேளை முற்பகல் 11.00 மணிக்கு சகல விருந்தினர்களும் தமது இருக்கைகளில் அமரவைக்கப்படவுள்ளனர்.

முற்பகல் 11.10 மணிக்கு நாடாளுமன்ற கட்டடத்தின் பிரதான நுழைவாயிலின் படிக்கட்டுக்கு அருகில் சபாநாயகர் வரவேற்கப்படவுள்ளார்.

அதனைத் தொடர்ந்து முற்பகல்; 11.15 மணிக்கு பிரதமர் வரவேற்கப்படவிருப்பதுடன், இதன் பின்னர் ஜனாதிபதியின் வருகை இடம்பெறும்.

முற்பகல், 11.20 மணியளவில் சபாநாயகர், நாடாளுமன்றச் செயலாளர்நாயகம் குசானி ரோஹணதீர உள்ளிட்டோர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை நாடாளுமன்ற கட்டடத்தின் பிரதான படிக்கட்டுகளுக்கு அருகில் வரவேற்கவுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து படைக்கலசேவிதர், பிரதி படைக்கல சேவிதர் மற்றும் உதவி படைக்கல சேவிதர் ஆகியோர் முன்செல்ல சபாநாயகர் ,நாடாளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோரினால் ஜனாதிபதி நாடாளுமன்ற கட்டடத்துக்குள் அழைத்துச் செல்லப்படுவார்.

அரசாங்கத்தின் கொள்கைப் பிரடகன உரை

இதன் பின்னர் உடையணி அறைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ள ஜனாதிபதி, முற்பகல் 11.25 மணிவரை அங்கிருப்பார் அதனைத் தொடர்ந்து பாராம்பரியத்துக்கு அமையப் பிரதிப் படைக்கல சேவிதர், செங்கோலைக் கையில் தாங்கியவாறு முன்செல்ல, படைக்கல சேவிதர், ஜனாதிபதி, சபாநாயகர், செயலாளர் குழு மற்றும் உதவிப் படைக்கல சேவிதர் ஆகியோர் வரிசைப்படி அணிவகுத்து சபா மண்டபத்துக்குள் செல்வார்கள்.

நாடாளுமன்றில் ஆரம்ப அமர்வை எளிமையாக நடத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை..! | President Opening Session In A Simple Manner

சபைக்குள் நுழையும்போது உதவி படைக்கல சேவிதர் ‘கௌரவ ஜனாதிபதி’ எனத் தெரிவித்ததும் ஆளும் கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தமது ஆசனங்களிலிருந்து எழுந்து நிற்பது பாரம்பரியமாக இடம்பெறும்.

சபா மண்டபத்துக்கு அழைத்துவரப்படும் ஜனாதிபதி அங்கிராசனத்தில் அமர்ந்து சபைக்குத் தலைமை தாங்குவார். இதன்போது சபாநாயகர், நாடாளுமன்ற குழுநிலையின்போது அமரும் கீழ் பகுதியிலுள்ள ஆசனத்தில் செயலாளர் குழுவுடன் அமர்ந்திருப்பார்.

இதனைத் தொடர்ந்து ஜனாதிபதியினால் அரசாங்கத்தின் கொள்கைப் பிரடகன உரை நிகழ்த்தப்பட்டு, சபை ஒத்திவைக்கப்படும்.

பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் ஆரம்ப நாள் நிகழ்வில் வெளிநாட்டு இராஜதந்திரிகள், முன்னாள் ஜனாதிபதிகள், முன்னாள் பிரதமர்கள், பிரதம நீதியரசர், உயர்நீதிமன்ற நீதியரசர்கள், சட்டமா அதிபர், அமைச்சுக்களின் செயலாளர்கள், முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட விசேட விருந்தினர்கள் கலந்து கொள்ளவிருப்பதாக படைக்கல சேவிதர் குசான் ஜயரட்ன தெரிவித்துள்ளார்.  

இலங்கை மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவால் ஏற்பட்டுள்ள ஆபத்து

இலங்கை மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவால் ஏற்பட்டுள்ள ஆபத்து

தென்னிலங்கையில் நபர் ஒருவர் சுட்டுக்கொலை

தென்னிலங்கையில் நபர் ஒருவர் சுட்டுக்கொலை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

சில்லாலை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Brampton, Canada

02 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வண்ணார்பண்ணை, உடுவில், Scarborough, Canada

12 Mar, 2025
19ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, England, United Kingdom, கொழும்பு

11 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொக்குவில், Dortmund, Germany

24 Mar, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் புதுறோடு, Wembley, United Kingdom

23 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

23 Mar, 2024
மரண அறிவித்தல்

விடத்தற்பளை, பாலையூற்று

09 Apr, 2025
மரண அறிவித்தல்

தனங்கிளப்பு, Lewisham, United Kingdom

06 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, Montreal, Canada

12 Apr, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம், கொழும்பு, பிரித்தானியா, United Kingdom, Toronto, Canada

11 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

14 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், பளை

11 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தொல்புரம், அராலி, Toronto, Canada

09 Apr, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Mississauga, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, London, United Kingdom

06 Apr, 2020
மரண அறிவித்தல்

வேம்படி தாளையடி, Vejle, Denmark

31 Mar, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
மரண அறிவித்தல்

குடத்தனை, வராத்துப்பளை, Montreal, Canada, Cornwall, Canada

07 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
மரண அறிவித்தல்

நவிண்டில், சுழிபுரம், London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
கண்ணீர் அஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொழும்பு

05 Apr, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US