மாலைதீவின் ஜனாதிபதிக்கு மோடியின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்குமாறு அழைப்பு
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் (Narendra Modi) பதவியேற்பு நிகழ்வுக்கு மாலைதீவின் ஜனாதிபதிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக இலங்கை, பூட்டான், நேபாளம், மொரீசியஸ் மற்றும் பங்களாதேஸ் ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கும் இந்த பதவி பிரமாண நிகழ்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இராஜதந்திர முறுகல்
இந்தநிலையில் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக தெரிவானமைக்கு மாலைதீவின் ஜனாதிபதி மொஹமட் முய்ஸு வாழ்த்து தெரிவித்திருந்த நிலையிலேயே அவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சீன சார்பு கொள்கையை கொண்டுள்ள மாலைதீவின் ஜனாதிபதி, இந்தியாவுக்கு எதிரான போக்கை கடைப்பிடித்து வருகின்றமை காரணமாக இரண்டு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர முறுகல் ஏற்பட்டுள்ளது.
இதற்கு மத்தியில் மாலைதீவின் ஜனாதிபதிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமையானது புதிய உறவுக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

பிரச்சனை கிளப்ப நினைத்த ரோஹினியால் மீனாவிற்கு கிடைத்த பரிசு... சிறகடிக்க ஆசை சீரியல் சூப்பர் புரொமோ Cineulagam

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri

குணசேகரனிடம் போட்ட திருமண சவாலில் ஜெயித்த ஜனனி, கடைசியில்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
