இலங்கைகைய அச்சுறுத்தும் மோசமான வானிலை : நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவசர அழைப்பு
இலங்கையில் நிலவும் மோசமான காலநிலையினால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
இன்று (27) காலை 9.30 மணிக்கு சிறப்புக் கூட்டத்திற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றத்திற்கு அழைத்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை
நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமையை சமாளிக்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பொது பாதுகாப்பு அமைச்சரும் சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்களும் இன்று பிற்பகலுக்குள் கண்டி மற்றும் நுவரெலியா பகுதிகளுக்கு அனுப்பப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |