யாழில் மக்களோடு தைப்பொங்கல் கொண்டாடி மகிழ்ந்த ஜனாதிபதி அநுர
பொங்கல் தினத்தையொட்டி யாழ்ப்பாணம் கிளம்பிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, விசேட பூஜைகள் மற்றும் நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளார்.
வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில், தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு மிக விமர்சையாக ஏற்பாடு செய்யப்பட்ட “பொங்கல் விழா“ இன்று (15) வேலணை தெற்கு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில் (ஐயனார் கோவில்) முன்றலில் நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, தமிழர் பாரம்பரிய முறைப்படி வரவேற்கப்பட்டுள்ளார்.
இதன்போது, பொங்கல் பானையில் அரிசியிட்டுப் பொங்கலை ஆரம்பித்து வைத்துள்ளார்.
பொங்கல் நிகழ்வுகள்
இதனைத் தொடர்ந்து, வடமாகாண சுற்றுலாப் பணியகத்தின் ஏற்பாட்டில் யாழ்.மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்தில் "பொங்கல் சங்கமம்" எனும் தொனிப்பொருளில் தைப்பொங்கல் விழா இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
ஆலயத்தில் இடம்பெற்ற பொங்கல் நிகழ்வுகளில் கலந்துகொண்டதுடன் சுற்றுலாப்பணியகத்தின் கண்காட்சியையும் பார்வையிட்டார்
இதனையடுத்து அங்கு நடைபெற்ற பொங்கல் கலைநிகழ்வுகளையும் கண்டு களித்துள்ளார்.






