அரசியல் தீர்வு விடயத்தில் நல்லெண்ணத்தை வெளிப்படுத்திய ஜனாதிபதி : தமிழ் எம்.பி புகழாரம்

Parliament of Sri Lanka Sri Lanka ITAK
By Thileepan Dec 07, 2024 02:51 AM GMT
Report

இரு தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி அநுரவை சந்தித்த போது அரசியல் தீர்வு விடயத்தில் தனது நேர்மையான நல்லெண்ணத்தை வெளிக்காட்டினார் என தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ப.சத்தியலிங்கம் (P. Sathiyalingam) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (06) ஆற்றிய தனது முதல் உரையிலேயே இவ்வாறு குறிப்பிட்டு்ள்ளார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், நாங்கள் எதிர்க்கட்சி என்ற பெயருடன் அமர்ந்துள்ளோம். ஆனாலும் அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து முற்போக்கான செயற்பாடுகளுக்கும் நாம் ஆதரவு வழங்குவோம்.

குடும்பத்துடன் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தவர் கைது

குடும்பத்துடன் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தவர் கைது

ஆட்சியாளர்களுக்கு எதிரான மனநிலை

சிறுபராயத்தில் இருந்தே ஆட்சியாளர்களுக்கு எதிரான மனநிலையுடன் வளர்ந்தவர்கள் நாங்கள். எனது தந்தை ஒரு பொதுநலவாதி. தனது வாழ்க்கை முழுவதும் தூய்மையான கம்யூனிசவாதியாக வாழ்ந்தவர். நான் அவரின் வளர்ப்பில் வந்ததால் இன, மத, குல வேறுபாடு எனக்கில்லை.

அரசியல் தீர்வு விடயத்தில் நல்லெண்ணத்தை வெளிப்படுத்திய ஜனாதிபதி : தமிழ் எம்.பி புகழாரம் | President Goodwill Political Solution Tamil Mp

ஆனால் இந்த நாட்டில் எண்ணிக்கையில் சிறுபான்மையானவர்கள் அனைத்து விதத்திலும் இந்த நாட்டின் ஏனைய மக்களுடன் சமமாக நடத்தப்படவில்லை என்ற எண்ணத்துடன் வளர்ந்தவர்கள்.

அதனாலேயே எமது நாட்டின் தேசிய கீதத்தையும் தேசியக் கொடியையும் நாங்கள் மனதார விரும்பவில்லை. ஆனால் மதிப்பளிக்கின்றோம்.

இந்த மனநிலை எனக்கு மட்டுமல்ல எனது வயதையொட்டிய இன்னும் பல ஆயிரக்கணக்கானவர்களுக்கு உள்ளது.

ஆனால், அதை வெளிப்படுத்தும் சந்தர்ப்பம் அவர்களுக்கு கிடைக்கவில்லை. இந்த நிலை ஏற்பட்டதையிட்டு பல சந்தர்ப்பங்களில் நான் மனவேதனை அடைந்துள்ளேன்.

நான் விரும்பும் தேசிய கீதத்தையும் நான் விரும்பும் தேசியக் கொடியையும் எனது வாழ்க்கைக் காலத்திற்குள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய பாரிய பொறுப்பு இந்த அரசினுடையது. 

அரசியல் கைதிகளுக்கான விடுதலை

இந்தநிலையில், பொருளாதார பிரச்சினை ஏற்பட காரணம் நாட்டின் வளங்களையும் இந்த நாட்டிற்கு உள்ள சந்தர்ப்பங்களையும் பிரதிபலிக்கும் பொருளாதாரக் கொள்கை இன்மையால் ஆகும்.

அரசியல் தீர்வு விடயத்தில் நல்லெண்ணத்தை வெளிப்படுத்திய ஜனாதிபதி : தமிழ் எம்.பி புகழாரம் | President Goodwill Political Solution Tamil Mp

யுத்தம் முடிவிற்கு வந்து 15 வருடங்களாகி விட்டது. வடக்கு - கிழக்கு மாகாணங்களில் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

யுத்தத்தால் இறந்த உறவுகளை வணங்கும் நினைவேந்தலுக்கு நீங்கள் தடை போடவில்லை. அது உங்கள் நல்லெண்ணத்தை காட்டுகிறது.

அதேநேரம் பல நூற்றுக்கணக்கான இறந்தவர்களின் உடல் புதைக்கப்பட்ட துயிலும் இல்லத்தில் இன்று இராணுவமுகாம் உள்ளது. இவ்விடத்தை விடுவிக்க நடவடிக்கை எடுத்து நல்லெண்ணத்தை காட்டுங்கள்.

அரசியல் கைதிகளை விரைவில் விடுதலை செய்யுங்கள். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதற்கு மனச்சாட்சியுடன் விடையை தேடுங்கள்.

அதனூடாக உங்கள் நல்லெண்ணத்தை காட்டுங்கள். மகாவலி - எல் வலயத்தில் மூவின மக்களிற்கும் காணிகளை பகிர்ந்தளியுங்கள்.

திட்டமிடப்படாத கட்டுமானங்கள்

மேலும், ஜனாதிபதி தனது உரையில் அரசியல் தீர்வு தொடர்பாக பேசவில்லை என எமது உறுப்பினர்கள் சொன்னாலும், இரு தினங்களுக்கு முன்னர் அவரை சந்தித்த போது அரசியல் தீர்வு விடயத்தில் தனது நேர்மையான நல்லெண்ணத்தை வெளிக்காட்டினார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சிக் காலத்தில் புதிய அரசியல் யாப்பின் வரைபு தயாரிக்கப்பட்ட போது, வழிநடத்தல் குழுவில் இருந்து மக்கள் விடுதலை முன்னணி தனது பங்களிப்பை வழங்கியிருந்தனர். அந்த முயற்சி தொடர வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். 

அரசியல் தீர்வு விடயத்தில் நல்லெண்ணத்தை வெளிப்படுத்திய ஜனாதிபதி : தமிழ் எம்.பி புகழாரம் | President Goodwill Political Solution Tamil Mp

சர்வதேச சட்டத்திற்கு முரணாக ஆட்கடத்தல்காரர்களால் கடத்திச் செல்லப்பட்டு ரஷ்ய இராணுவத்தில் பலவந்தமாக இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களை விடுவித்து தருமாறும் வடக்கு மாகாணத்தை சேர்ந்த அவர்களது உறவுகள் கோரிக்கை விட்டுள்ளார்கள்.

இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு தயவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

அத்துடன், அண்மையில் ஏற்பட்ட அனர்த்தம் தொடர்பிலும் சில வார்த்தைகள் சொல்ல எண்ணுகிறேன். திட்டமிடப்படாத கட்டுமானங்களும், வடிகால் அமைப்பு சீரின்மையும், அனுமதியற்ற கட்டிட நிர்மாணங்களும் வெள்ளமேற்பட முக்கிய காரணங்களாகும்.

பாதிக்கப்பட்ட மக்களிற்கான உடனடி நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட நான் கடமைப்பட்டுள்ளேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் களமிறக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான உத்தியோகத்தர்கள்! வெளியான காரணம்

நாட்டில் களமிறக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான உத்தியோகத்தர்கள்! வெளியான காரணம்

கோட்டாபய ராஜபக்சவின் நிலையே ஏற்படும்! அநுரவை எச்சரிக்கும் எம்.பி

கோட்டாபய ராஜபக்சவின் நிலையே ஏற்படும்! அநுரவை எச்சரிக்கும் எம்.பி

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US