ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகும் இலங்கை : சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள அனுரவின் கூட்டம்
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayaka) தலைமையில் நடைபெற்ற தேசிய அகில இலங்கை தாதியர் மாநாட்டில் அரச தாதியர்கள் சீருடையில் கலந்துகொண்டமை தேர்தல் சட்டங்களை மீறும் செயலாகும் என நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை கண்காணிக்கும் அமைப்பான கபே அமைப்பு தெரிவித்துள்ளது.
தேர்தல் சட்டத்தை மீறும் செயல்
பொதுமக்களின் வரிப்பணத்தினால் வழங்கப்படும் சீருடையை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்துவது நிறுவனங்களின் சட்டவிதிகளையும் தேர்தல் சட்டத்தையும் மீறும் செயலாகும் என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், இந்த நடவடிக்கை தேர்தல் சட்ட விதிகளை மீறும் செயல் என, சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தலுக்கான மக்கள் இயக்கம், தேசிய தேர்தல் ஆணைக்குழுவுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் வழுக்கி விழுந்த தமிழ், பதறி அடித்து ஓடிய சேது... சின்ன மருமகள் பரபரப்பு புரொமோ Cineulagam
