சஜித்தின் சகாக்கள் பலரும் ரணிலின் மேடையில் ஏறுவர் : மொட்டு எம்.பி. மகிந்தானந்த
ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் பலரும் அடுத்து வரும் நாட்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன்(Ranil Wickremesinghe) இணையவுள்ளனர் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே(Mahindananda Aluthgamage) தெரிவித்துள்ளார்.
காலியில் நேற்று நடைபெற்ற 'ஒன்றாக வெல்வோம் – காலியில் நாம்' கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ரணில் வெற்றிபெறுவார்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிடமாட்டார், அவர் ஓடிவிடுவார் எனச் சிலர் பிரசாரம் செய்தனர். ஆனால், அவர் தேர்தலில் போட்டியிடுகின்றார். அவர் வேட்பாளராகவே இந்த மேடையில் அமர்ந்துள்ளார்.
எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் வெற்றி பெறுவார் என்பது உறுதி. அவர் பின்னால்தான் அனைத்து கட்சிகளும் இன்றுள்ளன.
நெருக்கடியான நேரத்தில் நாட்டைப் பொறுப்பேற்காத சஜித் பிரேமதாஸ(Sajith Premadasa) வெற்றி வேட்பாளரா? இல்லை. நாட்டை மீட்கக்கூடிய வேட்பாளர் எமது மேடையிலேயே இருக்கின்றார். அடுத்துவரும் நாட்களில் சஜித்தின் சகாக்களும் எமது மேடையில் ஏறுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri

தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam
