ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அச்சம் வெளியிட்டுள்ள பொன்சேகா
இவ்வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு எதிராக பல சக்திகள் செயற்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா(Sarath Fonseka) தெரிவித்துள்ளார்.
அச்சத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகள்
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
செப்டம்பர் 17ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 17ஆம் திகதிக்கும் இடையில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை தாமதப்படுத்தவேண்டும் என்ற விடயத்தில் சில சக்திகள் உறுதியாகவுள்ளமை புலனாகியுள்ளது.
இத்தகைய செயற்பாடுகள் அச்சத்தை ஏற்படுத்துகின்றன என்பதுடன் கடும் கரிசனத்திற்குரியவையாக காணப்படுகின்றன.
இலங்கையின் அரசமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள சட்டங்களின் அடிப்படையில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு நான் சம்பந்தப்பட்ட சகல அதிகாரிகளையும் கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam

வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan

பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri
