ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பு
இந்த வருடத்தில் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் நடத்தப்படவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அமைச்சரவை இணக்கம்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய செவலவீனங்களை 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தேர்தலுக்காக ஒதுக்கீடு செய்துள்ள 10 பில்லியன் ரூபாவில் முகாமைத்துவம் செய்ய வேண்டியுள்ளமை தொடர்பில் அமைச்சரவை கவனம் செலுத்தியுள்ளது.
நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்த விடயங்களை அடிப்படையாகக் கொண்டு அமைச்சரவை இந்த விடயத்திற்கு இணங்கியுள்ளது.
அரசாங்கத்திடம் காணப்படும் வரையறுக்கப்பட்ட நிதி நிலைமையினால் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்துவதற்கு தேவையான நிதியை 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வழங்கப்படவுள்ளமை தொடர்பிலும் அமைச்சரவை ஆராய்ந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
You May Like this
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

Singappenne: அன்பு, ஆனந்தியின் புதிய திட்டம்- உதவி செய்யும் யாழினி.. பயந்து நடுங்கும் துளசி Manithan

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
