புதிய இராஜதந்திரிகள் ஐவர் ஜனாதிபதியால் நியமனம்
இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக உயர்ஸ்தானிகர் ஒருவரையும் நான்கு தூதுவர்களையும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) நியமித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று (07) இடம்பெற்ற வைபவத்தின் போது ஜனாதிபதி உத்தியோகபூர்வ நியமனங்களை கையளித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.
நியூசிலாந்திற்கான உயர் ஸ்தானிகராக டபிள்யூ.ஜி.எஸ் பிரசன்னவும், கட்டாருக்கான தூதுவராக ஆர்.எஸ்.கான் அசார்ட், ரஷ்யாவுக்கான தூதுவராக எஸ்.கே.குணசேகர, குவைத்துக்கான தூதுவராக எல்.பி.ரத்நாயக்க மற்றும் எகிப்திற்கான தூதுவராக ஏ.எஸ்.கே.செனவிரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சர்வதேச சந்தை வாய்ப்புகள்
இதனைத் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி, இராஜதந்திரிகளின் திறன்களில் நம்பிக்கையை வெளிப்படுத்தியதுடன், இலங்கையின் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதிலும் அந்தந்த நாடுகளுடன் ஒத்துழைப்பை வளர்ப்பதிலும் அவர்களின் தேவையை சுட்டிக் காட்டியுள்ளார்.
வெளிநாடுகளில் குறிப்பாக மத்திய கிழக்கு, தென் கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் கணிசமான எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்தோர் பணிபுரியும் இலங்கையர்களின் நலனை உறுதிப்படுத்துவதற்கு இலங்கையின் இராஜதந்திரிகளின் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
மேலும், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இராஜதந்திரிகளை, நேரடி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதிலும், இலங்கையின் தொழில் முயற்சியாளர்களுக்கு சர்வதேச சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்துவதிலும் கவனம் செலுத்துமாறும் ஜனாதிபதி திஸாநாயக்க கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





பதினாறாவது மே பதினெட்டு 4 மணி நேரம் முன்

Optical illusion: படத்தில் சரியான திசையில் இருக்கும் சரியான இலக்கத்தை கண்டுபிடிக்க முடியுமா? Manithan

சரிகமப L'il Champs வின்னர் திவினேஷ் தனது தந்தைக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு.. இதோ பாருங்க Cineulagam

ஆபரேஷன் சிந்தூர்... தாக்குதலுக்கு முன்பே பாகிஸ்தானுக்கு தெரியும்: வெளிவிவகார அமைச்சர் கருத்தால் குழப்பம் News Lankasri
