காசாவில் குறைமாத குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம்!
காசாவில் இனி மின்சாரம் இல்லாமல் போனால், குறைமாதக் குழந்தைகள் உயிரிழக்க நேரிடும் என்று வைத்தியர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பில் அல் ஷிபா மருத்துவமனை வைத்தியர் நாசர் புல்புல் தெரிவிக்கையில்,
“இந்த நெருக்கடியான நிலைக்குத் தேவையான மருத்துவ உதவிகளை அனுப்பி வைக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.இல்லையெனில் நாங்கள் மிகப்பெரிய அழிவை சந்திக்க வேண்டியிருக்கும்.
வைத்தியசாலைகளில் தஞ்சம்
இங்கே 55 குழந்தைகள் உள்ளனர்.ஒருவேளை மின்சாரம் இல்லாமல் போனால் மின்சார உதவி தேவைப்படும். குழந்தைகளை அடுத்த 5 நிமிடங்களில் இழந்து விடுவோம்” என தெரிவித்துள்ளார்.

குறித்த வைத்தியசாலையில் மட்டும் சுமார் 60,000 பேர் தஞ்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், வைத்தியசாலைகளில் எரிபொருள் மிகவும் குறைவாக, அபாய கட்டத்தில் இருப்பதாக ஐ.நா எச்சரித்துள்ளது.
84 நாட்கள் பிக்பாஸ் 9 வீட்டில் விளையாடியதற்காக கனி வாங்கிய சம்பளம்... எத்தனை லட்சம் தெரியுமா? Cineulagam
கெய்ர் ஸ்டார்மர் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்படுவது உறுதி: கடுமையாகத் தாக்கிய பிரபலம் News Lankasri