மேல் மாகாணத்தில் இருக்கும் கர்ப்பிணி பெண்களுக்கான முக்கிய கோரிக்கை
இலங்கையின் மேல் மாகாணத்தில் 30 வயதிற்கு மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள், அருகிலுள்ள தடுப்பூசி மையங்களுக்கு சென்று கோவிட் -19 க்கு எதிராக தடுப்பூசிகளை செலுத்துமாறு இலங்கை மகப்பேறியல் மற்றும் மகப்பேறு மருத்துவர்கள் கோரியுள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் வேலைக்கு பயணம் செய்யும் மற்றும் அதிக ஆபத்து நிறைந்த தொழில்களில் ஈடுபடும் பெண்கள் கோவிட் -19 தடுப்பூசிகளைப் பெறுவது நல்லது என்று தெரிவித்துள்ளனர்.
கோவிட் -19 இன் டெல்டா மாறுபாட்டிற்கு எதிராக தடுப்பூசி சிறந்த பாதுகாப்பை வழங்குகிறது என்றும் அவர்கள் கூறினர்.
நாட்டில் ஏற்கனவே 12 கர்ப்பிணி பெண்கள் கோவிட் -19 தொற்றால் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.