பிரசன்ன ரணவீரவுக்கு மீண்டும் விளக்கமறியல்
கிரிபத்கொடையில் அரசுக்குச் சொந்தமான காணியை போலி ஆவணங்களை தயாரித்து தனியாருக்கு விற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மஹர நீதவான் ஜனிதா பெரேரா முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பிரசன்ன ரணவீரவை செப்டம்பர் 22 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
போலி ஆவணங்களைத் தயாரித்து
வழக்கு ஸ்கைப் மூலம் விசாரிக்கப்பட்டதால், முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர இன்று நீதிமன்றத்தில் நேரில் முற்படுத்தப்படவில்லை.

கிரிபத்கொடையில் அரசுக்குச் சொந்தமான நிலத்தை போலி ஆவணங்களைத் தயாரித்து தனியாருக்கு விற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் ரணவீரவும் மேலும் நால்வரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri