முக்கிய கட்சிகளால் நிராகரிக்கப்படும் பிரசன்ன ரணதுங்க!
மஹிந்த ராஜபக்ச குடும்பத்தின் நெருங்கிய உறவினராகவும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் ஆதரவாளருமான பிரசன்ன ரணதுங்க, தற்போது அனைத்து கட்சிகளாலும் முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை பொதுஜன பெரமுன மற்றும் அவர்கள் கட்டியெழுப்ப முயற்சிக்கும் அரசியல் கூட்டணிகளில் இருந்து பிரசன்ன ரணத்துங்க புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த பொதுத் தேர்தலுக்குப் பிறகு, பல்வேறு அரசியல்வாதிகள் மற்றும் கட்சிகள் மற்றும் அமைப்புகளுடன் கைகோர்க்க அவர் பல்வேறு சந்தர்ப்பங்களில் பலத்த முயற்சிகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குற்றவாளி என தீர்ப்பு
இதற்கிடையில், மீதொட்டமுல்ல பகுதியில் உள்ள ஒரு நிலத்தை மீட்டெடுக்க அனுமதி வழங்குவதற்காக ஆறு கோடி ஐம்பது இலட்சம் ரூபாய் நிதி கோருவது தொடர்பான விசாரணையில் கொழும்பு மேல் நீதிமன்றம் அவரை குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளது.
எனினும், இந்த முடிவுக்கு எதிராக மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு ஒன்று செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஐந்து பேர் கொண்ட மேல்முறையீட்டு நீதிமன்ற கூடியபோது இது தொடர்பான மனுவை அடுத்த மாதம் 5, 13 மற்றும் 16 ஆகிய திகதிகளில் விசாரிக்க முடிவு செய்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri

பாகிஸ்தான், சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல் - இந்தியா சொந்தமாக உருவாக்கும் பாதுகாப்பு அமைப்பு News Lankasri
