வீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீர் தொடர்பில் பிரதேச சபை அசமந்தம்: மக்கள் குற்றச்சாட்டு
வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீர் தொடர்பில் வவுனியா தெற்கு பிரதேச சபைக்கு அறிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனப் பாதிக்கப்பட்ட மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
வவுனியாவில் கடந்த சில நாட்களாகப் பெய்து வந்த மழை காரணமாக உக்குளாங்குளம் பகுதியில் சில வீடுகளுக்குள்ளும், வீட்டு வளவுகளுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்தமையால் அங்கு வசித்து வந்த மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கி இருந்தனர்.
குறித்த பகுதியில் வீதி திருந்த வேலையின் போது சரியான வடிகால் கட்டமைப்பை கவனிக்காது வீதி புனரமைக்கப்பட்டமை காரணமாகவே தமது வீடுகளுக்குள் வெள்ளம் வந்துள்ளதாகவும் அப் பகுதி பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் வவுனியா தெற்கு பிரதேச சபை தலைவருக்குத் தெரியப்படுத்தி, உடனடியாக குறித்த வெள்ள நீரை வழிந்தோடும் வகையில் வெட்டி அகற்றி விடுமாறும் பாதிக்கப்பட்ட மக்கள் கோரியிருந்தனர்.
உடனடியாக ஒருவரை அனுப்பி அதனை செய்வதாகப் பிரதேச சபை தவிசாளர் உறுதியளித்த போதும் நான்கு நாட்கள் கடந்த போதும், இதுவரை குறித்த வெள்ள நீர் வெளியேற்றப்படாமையால் அம்மக்களின் வீட்டு வளவுக்குள் தொடர்ந்தும் வெள்ள நீர் காணப்படுகின்றது.
இது குறித்து பிரதேச சபை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனப் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
இது வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் எஸ்.யோகராசாவை தொடர்பு கொண்ட போதும், அவரது தொலைபேசியில் இருந்து பதில் கிடைக்கவில்லை.
இதனையடுத்து வவுனியா தெற்கு பிரதேச சபையின் உறுப்பினர் இ.விக்டர்ராயை தொடர்பு கொண்டு கேட்ட போது,
கன மழையால் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பு குறித்து உக்குளாங்குளம், கூமாங்குளம் பகுதியிலிருந்து எமக்கும் முறைப்பாடு கிடைத்தது.
நான் உடனடியாக சில பகுதிகளுக்குச் சென்று வெள்ள நிலைமையைப் பார்வையிட்டதுடன், தவிசாளரிடம் ஜேசிபி இயந்திரத்தை வழங்குமாறு அல்லது அதனை அனுப்பி நீரை வெளியேற்றுமாறும் கோரியிருந்தேன்.
சில மணித்தியாலத்திற்குள் செய்வதாக தவிசாளர் தெரிவித்த போதும், இதுவரை குறித்த பகுதிக்குச் சென்று அவர் பார்வையிடக் கூட இல்லை. நான் சில பகுதிகளில் மக்களின் மண்வெட்டிகளைப் பெற்று நீரை வெளியேற்றி இருந்தேன்.
அவர்களது அவசர நிலையில் உதவாது விட்டமை தவறு எனவும், இது தொடர்பில் சபை
அமர்வின் போது சபையின் கவனத்திற்குக் கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.





உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri