ரஷ்யாவில் மீண்டும் சக்திவாய்ந்த நில நடுக்கம்
ரஷ்யாவில் சில நாட்கள் இடைவெளியில் அங்கு மீண்டும் ஒரு சக்திவாய்ந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
ரஷ்யாவின் குரில் தீவுகளில் (Kuril Islands) சுமார் 6.8 மெக்னிடியூட் அளவில் வலிமையான நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக, வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இருப்பினும், பின்பு இந்த நில அதிர்வு 7 மெக்னிடியூட் அளவிலிருந்ததாக, அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிக ஆபத்துள்ள கடலோரப் பகுதிகளில்
இந்த வலிமையான நில அதிர்வைத் தொடர்ந்து அங்கு ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் தற்போது நீக்கப்பட்டுள்ளது.
Russia's Ministry for Emergency Services lifted a tsunami warning for the Kamchatka Peninsula on Sunday after a 7.0-magnitude earthquake hit the nearby Kuril Islands.https://t.co/cjaw1TJDHJ
— The Weather Network (@weathernetwork) August 3, 2025
இந்த நில அதிர்வால் உயிர்ச்சேதம் அல்லது பொருள் சேதம் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
மேலும், கம்சட்காவின் அருகே உள்ள அதிக ஆபத்துள்ள கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.





ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 5 மணி நேரம் முன்

பாரிய முதலீடுகளால் இன்னொரு ஏழை நாட்டிற்கு வலை விரித்த சீனா... முதற்கட்டமாக ரூ 3,000 கோடி News Lankasri
