எந்நேரத்திலிலும் பயன்படுத்தும்படி கோட்டாபயவிற்கு கிடைக்கவுள்ள அதிகாரம்! தயார்நிலையில் இருக்கவும் அறிவுறுத்தல் (Video)
மகிந்த ராஜபக்ச பதவி விலகியதால் ஏற்பட்ட தவறை திருத்திக் கொள்ளக்கூடிய வாய்ப்பு விரைவில் கிடைக்கும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினரிடம் அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
எப்படியும் எதிர்வரும் மார்ச் மாதத்தின் பின்னர் தேர்தல் நடத்தப்படலாம் என்றும், எந்தவொரு தேர்தலுக்கும் தயாராக இருக்குமாறும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
அத்துடன் எதிர்வரும் மார்ச் மாதத்தின் பின்னர் அரசியலமைப்பு ரீதியில் எந்த நேரத்திலும் நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் தனக்கு கிடைக்கும் என்றும், ஏற்பட்ட தவறுகளை திருத்திக் கொள்ள அதன்போது சந்தர்ப்பம் கிடைக்கும் என்பதுடன், பொதுஜன பெரமுனவினரின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க ஸ்டாலின் மற்றும் நிரோஷா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா Cineulagam
உக்ரைன் வான் பரப்பிற்குள் பட்டப்பகலில் நுழைந்த 400 ட்ரோன்கள்: புதிய உத்தியை கையில் எடுக்கும் ரஷ்யா News Lankasri
கார்க் தீவுக்கு குறி! முக்கிய வான்வழி படைத் தளபதிகள் மத்திய கிழக்கிற்கு அனுப்பும் அமெரிக்கா News Lankasri