ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வே தமிழ் மக்களின் ஆணை: சபா குகதாஸ் தெரிவிப்பு
ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வு தேவை என்றே மக்கள் ஆணை வழங்கியுள்ளனர் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் (saba.kugathas) தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இறுதியாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும் வடக்கு, கிழக்கில் சமஸ்டி தீர்வு தேவை என்பதற்கே பெரும்பான்மை ஆதரவை தமிழ் மக்கள் வழங்கியுள்ளனர்.
சர்வசன வாக்கெடுப்பு
1949ஆம் ஆண்டு சமஷ்டிக் கட்சி ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து அதிகாரப் பகிர்வுக்கான மக்கள் ஆணையும் 1977 ஆம் ஆண்டு தனித் தமிழ் ஈழத்திற்கான மக்கள் ஆணையும் 2004 ஆம் ஆண்டு மிகப் பலமான மக்கள் ஆணையும் அதன் பின்னர் இன்று வரை ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வு என்பதற்குமான மக்கள் ஆணையே வழங்கப்பட்டுள்ளது.

தேர்தல் முடிவுகளின் பெரும்பான்மை முடிவுகளின் படி அதிகாரப் பகிர்வை கோரி நிற்கும் மக்களிடம் ஒரே நாடு ஒரே சட்டம் என்பதை திணிக்க முற்படுவதை தவிர்த்து வேண்டும் என்றால் தமிழர்களின் அரசியல் அபிலாசையை தீர்க்க சர்வசன வாக்கெடுப்பு ஒன்றை நடாத்துங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்து சமுத்திரத்தில் டியாகோ காசியா தனது முக்கியத்துவத்தை இழக்கிறதா..! 12 மணி நேரம் முன்
வெளிவரப்போகும் குணசேகரன் ஈஸ்வரியை தாக்கிய வீடியோ, எப்படி தெரியுமா?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
மூன்று நாட்களுக்கான உணவை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri