இலங்கை பல பகுதிகளில் மின்சார தடை - இயல்பு வாழ்க்கை பாதிப்பு
இலங்கையின் பல பகுதிகளில் சீரற்ற காலநிலை தொடர்ந்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
அடைமழை காரணமாக பல பகுதிகளில் மின்சார தடை ஏற்பட்டுள்ளதாக மின்சார அமைச்சின் ஊடக பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இதுவரை 44 ஆயிரம் பேருக்கு மின்சார தடை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய குளியாப்பிட்டிய, குருநாகல், ஹொரனை, மத்துகம, நாரம்மல, தம்புளை, அக்குரெஸ்ஸ மற்றும் கேகாலை ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு மின்சார தடை ஏற்பட்டுள்ளது.
மின்சார தடை ஏற்பட்டுள்ள பகுதிகளை அதனை வழமைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.