எதிர்வரும் மூன்று நாட்களுக்கான மின்வெட்டு விபரம் வெளியானது
ஒக்டோபர் 8 முதல் 10 ஆம் திகதி வரையில் 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, ABCDEFGHIJKLPQRSTUVW வலயங்களில் பகல் வேளையில் 1 மணித்தியாலமும் இரவு வேளையில் 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதேவேளை, P முதல் W வரையான வலயங்களிலும் இதே நடைமுறை பின்பற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.