பெப்ரவரி 17ஆம் திகதி வரை மின்வெட்டுக்கு
அனுமதி வழங்கப்பட மாட்டாது என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் 331000 இற்கும் அதிகமான மாணவர்களின்
உரிமைகளைப் பாதுகாப்பதற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அதன் தலைவர் ஜனக
ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த காலப்பகுதியில் மின்வெட்டு ஏற்பட்டால், அது
அங்கீகரிக்கப்படாத மற்றும் சட்டவிரோதமானதாக கருதப்படும் என பொதுப் பயன்பாடுகள்
ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலைநேர செய்திகளின் தொகுப்பு,