மின்தடை குறித்து சிறப்பு அறிக்கை வெளியீடு
கடந்த 9ஆம் திகதி, நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின் தடையைத் தொடர்ந்து, மின் கட்டணத்தின் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்த உடனடி மற்றும் நீண்டகால நடவடிக்கைகளை செயல்படுத்தியுள்ளதாக இலங்கை மின்சார சபை (CEB) தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இலங்கை மின்சார சபை சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
பொதுமக்களுக்கு உறுதியளிப்பு
குறித்த அறிக்கையில், மின் தடைக்கான காரணத்தையும், மின் கட்ட நிலைத்தன்மைக்கு எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளையும் இலங்கை மின்சார சபை தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும், கடந்த 9ஆம் திகதி அன்று காலை 11.13 மணிக்கு ஏற்பட்ட நாடு தழுவிய மின் தடையின் போது பொதுமக்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கும் வருத்தம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க உடனடி மற்றும் நீண்டகால திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இலங்கை மின்சார சபை பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளது.

