பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான தமிழர் பேரணி மன்னாரில் இருந்து வெள்ளாங்குளம் ஊடாக மல்லாவி நோக்கி பயணம்
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான தமிழர் பேரணி இன்று வவுனியாவில் இருந்து மன்னார் நோக்கி பயணித்து மன்னார்மடு சந்தியை வந்தடைந்தது.
பின்னர் மடு சந்தியில் இருந்து ஆரம்பித்த பேரணியானது முருங்கன் ஊடாக மன்னார் நோக்கி சென்றது. இதன்போது பிரதான வீதிகளில் உள்ள பொலிஸ் சோதனைச் சாவடிகளில் பொலிஸ் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்ட நிலையில், பல்வேறு தடைகளையும் தாண்டி குறித்த பேரணி மன்னார் பிரதான பாலம் ஊடாக மன்னார் நகரை வந்தடைந்தது.
மன்னார் பிரதான பாலத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டதோடு,மன்னார் நீதிமன்றத்தின் கட்டளையினையும் பொலிஸார் ஒலி பெருக்கி மூலம் அறியப்படுத்தினர்.
பேரணியாக வந்த மோட்டார் சைக்களில் மற்றும் வாகனங்களின் இலங்கங்களையும் பொலிஸார் பதிவு செய்த பின்னர் மன்னார் நகர பகுதிக்குள் செல்ல அனுமதித்தனர்.
மன்னார் பிரதான பாலத்தில் இருந்து மன்னார் நகர பகுதியில் உள்ள தந்தை செல்வா சிலையடி வரை குறித்த ஊர்வலம் இடம்பெற்றது. குறித்த ஊர்வலத்தில் சர்வ மத தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், இளைஞர்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.
பேரணியில் மன்னார் மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்,அரசியல் கைதிகளின் உறவுகளும் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் மன்னார் மாவட்டத்தில் உள்ள முஸ்ஸீம் மக்களும் குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இணைந்து கொண்டனர்.
குறித்த போரட்டம் மன்னார் நகரில் இருந்து மன்னார்,யாழ். பிரதான வீதியூடாக வெள்ளாங்குளம் நோக்கி குறித்த பேரணி சென்றுள்ளது.













சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri
