பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி போராட்டத்தில் வவுனியாவில் கண்ணீர் மல்கிய தாய்மார்
வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் இருந்து பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரையான தமிழர் தாயகத்தில் தமிழர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களுக்கு எதிரான பேரணிநான்காம் நாள் தொடர்கின்றது.
மக்கள் பேரெழுச்சியாகிய சாத்வீக பேரணி பல்வேறு தடைகளை உடைத்து சர்வதேசத்தின்பார்வையை பாதிப்புற்ற தாயக மக்களுக்கான நீதி கோரிய போராட்டம் தொடர்கிறது.
இந்தப் போராட்டத்திற்கு சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்கள் எனப் பெரும் திரளான மக்கள் தமது ஆதரவினை வழங்கி இருக்கின்றார்கள்.
இதேவேளை, வடக்கு கிழக்கு மாகாண சிவில் சமூக அமைப்புகள், தமிழ் தேசியக் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் இணைந்து இந்தப் பேரணியை முன்னெடுத்து வருகின்றன.
இந்நிலையில், பேரெழுச்சிப் பேரணியானது கிளிநொச்சி, வவுனியா சென்று மன்னார் ஊடாக நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் பொலிகண்டியில் நிறைவடையவுள்ளது.







மீனாவால் அண்ணாமலை உயிருக்கு ஆபத்து.. விஜயாவின் சதியா இது! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
பிரித்தானியாவில் ஆண்டுக்கு 1 மில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கும் ஒருவர் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? News Lankasri
வானதியை திருமணம் செய்துகொள்ள தயங்கும் பாண்டியன்.. நிலா தான் காரணமா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam