பொத்துவில் - பொலிகண்டி வரையான பேரணி! திலீபனில் நினைவுத் தூபியில் அஞ்சலி
தமிழர்களின் நீதிகோரிய பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் கலந்துகொண்டுள்ளவர்கள் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனில் நினைவுத் தூபியில் அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயிலுக்குச் சென்ற பேரணி, நேற்றுமுன்தினம் முள்ளிவாய்க்கால் மண்ணில் எடுக்கப்பட்ட மண்ணை, பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்படவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கு பயன்படுத்த மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தமிழர் வரலாற்றுச் சிறப்புமிக்க வடமராட்சி மண்ணை நோக்கி பேரணி முன்னேறிச் செல்கிறது. வடக்கு - கிழக்கு மாகாண, சமயத் தலைவர்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இணைந்து மக்களை அணி திரட்டி இந்த போராட்டத்தை நடத்துகின்றனர்.
பல்வேறு கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி கடந்த 3ம் திகதி பொத்துவிலில் ஆரம்பிக்கப்பட்ட இந்த பேரணி இன்று பொலிகண்டியில் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.








சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri
