வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் மகோற்சவம் ஒத்திவைப்பு
வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய மகோற்சவத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் , ஆலய தர்மகர்த்தா சபை மகோற்சவத்தை எதிர்வரும் மாசி மாதத்துக்கு ஒத்திவைத்துள்ளது.
ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் சுவாமி ஆலய மகோற்சவ கால ஏற்பாட்டுக் கூட்டம் நேற்று வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் ஆழ்வாப்பிள்ளை சிறீ தலைமையில் இடம்பெற்றது.
குறித்த கூட்டத்தின் முடிவில் இவ்வருடம் மகோற்சவம் நடத்துவதற்கான அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஆலய தர்ம கர்த்தா சபையினர், ஆலய நிர்வாகத்தினர் ஆகியோர் திருவிழா உபயகாரர்களுடன் ஆலய வளாகத்தில் இன்று கலந்துரையாடலை நடத்தினர்.
இந்தக் கலந்துரையாடலின் முடிவில் , ஆலய மகோற்சவத்தை அடுத்த வருடம் மாசி மாதம் வரும் பூரணை மகம் நாளுக்கு ஒத்திவைக்கத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri
அடுத்த பிளானில் அறிவுக்கரசி, அழுது புலம்பும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam