போராட்டத்தில் குதித்த தபால் தொழிற்சங்கம் - சேவைகளை பெற முடியாமல் மக்கள் பாதிப்பு (Photos)

Jaffna Sri Lanka Politician SL Protest Sri Lanka Anti-Govt Protest
By Kajinthan Dec 11, 2023 05:41 AM GMT
Report

யாழ்ப்பாணம்

ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.

குறித்த போராட்டம்  தபால் திணைக்களத்தின் முகாமைத்துவ மற்றும் செயற்பாட்டுப் பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் தீர்வு காணத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைநிறுத்தப் போராட்டமானது நாளை (12.10.2023) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை முழுவதும் மின்சாரம் தடைப்பட்டமையினால் ஏற்பட்ட இழப்பு

இலங்கை முழுவதும் மின்சாரம் தடைப்பட்டமையினால் ஏற்பட்ட இழப்பு


வேலைநிறுத்தப் போராட்டம்

27,000 தபால் ஊழியர்கள் இந்த அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.

போராட்டத்தில் குதித்த தபால் தொழிற்சங்கம் - சேவைகளை பெற முடியாமல் மக்கள் பாதிப்பு (Photos) | Postal Service Union Strick In Srilanka

தபால் திணைக்களத்திற்கு சொந்தமான கட்டிடங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 653 தபால் நிலையங்கள், 3,410 உப தபால் நிலையங்கள் மற்றும் அனைத்து நிர்வாக அலுவலகங்களும் முடங்கும் என்றும், சுமார் 27,000 தபால் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சேவைகளைப் பெறுவதற்காக வட்டுக்கோட்டை தபால் நிலையத்துக்கு வருகை தந்த மக்கள், தபால் நிலையம் மூடப்பட்டுள்ளதை பார்த்து திரும்பிச் செல்வதை அவதானிக்க முடிகின்றது.

போராட்டத்தில் குதித்த தபால் தொழிற்சங்கம் - சேவைகளை பெற முடியாமல் மக்கள் பாதிப்பு (Photos) | Postal Service Union Strick In Srilanka

போராட்டத்தில் குதித்த தபால் தொழிற்சங்கம் - சேவைகளை பெற முடியாமல் மக்கள் பாதிப்பு (Photos) | Postal Service Union Strick In Srilanka

மட்டக்களப்பு

ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி 48 மணித்தியால பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள விடுத்த அழைப்பின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தபாலகங்கள் மூடப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு பிரதான தபாலகம் இன்றைய தினம் (11.12.2023) மூடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.

தபால் ஊழியர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் காரணமாக தபால் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளதனால் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

பொதுமக்கள் ஏமாற்றம்

போராட்டத்தில் குதித்த தபால் தொழிற்சங்கம் - சேவைகளை பெற முடியாமல் மக்கள் பாதிப்பு (Photos) | Postal Service Union Strick In Srilanka

போராட்டத்தில் குதித்த தபால் தொழிற்சங்கம் - சேவைகளை பெற முடியாமல் மக்கள் பாதிப்பு (Photos) | Postal Service Union Strick In Srilanka

இதன்காரணமாக பல்வேறு தேவைகள் நிமிர்த்தம் தபாலகங்களுக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பியதை காணமுடிந்தது.

இன்றும் நாளையும் தபாலகங்கள் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தபால் சேவையினை பெறவுள்ள மக்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

மேலதிக செய்திகள்: குமார்

போராட்டத்தில் குதித்த தபால் தொழிற்சங்கம் - சேவைகளை பெற முடியாமல் மக்கள் பாதிப்பு (Photos) | Postal Service Union Strick In Srilanka

மன்னார்

ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி 48 மணித்தியால பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள விடுத்த அழைப்பின் அடிப்படையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள தபாலகங்கள் இன்று (11) திங்கள் காலை முதல் மூடப்பட்டுள்ளன.

மேலும் மன்னார் பிரதான தபாலகம் இன்றைய தினம் (11) மூடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.

பொது மக்கள் ஏமாற்றம்

போராட்டத்தில் குதித்த தபால் தொழிற்சங்கம் - சேவைகளை பெற முடியாமல் மக்கள் பாதிப்பு (Photos) | Postal Service Union Strick In Srilanka

தபால் ஊழியர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் காரணமாக தபால் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

இதன் காரணமாக பல்வேறு தேவைகள் நிமித்தம் தபாலகங்களுக்கு வந்த பொது மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பியதை காணமுடிந்தது.

இன்றும், நாளையும் (12) தபாலகங்கள் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தபால் சேவையை பெறவுள்ள மக்கள் சிரமங்களை எதிர்நோக்கி உள்ளனர். 

மேலதிக செய்திகள்: ஆசிக்

நுவரெலியாவிலும் கண்டியிலும் உள்ள 100 வருடங்களைத் தாண்டிய புராதன தபால் நிலையங்களை விற்பனை செய்ய அரசாங்கம் முடிவெடுத்துள்ளமையை விலக்கிக் கொள்ள வேண்டும் மற்றும் அஞ்சலகப் பணியாளர்களுக்கு 20000 ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தே இந்த பணிப் பகிஷ்கரிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் புராதன வரலாற்றைப் பிரதிபலிக்கும் விலைமதிப்பற்ற புராதனச் சொத்தாக நுவரெலியா தபால் நிலையக் கட்டிடத் தொகுதியை இலங்கையின் முதன்மை சுற்றுலா ஊக்குவிப்பு நிறுவனம் ஒன்றிற்கு விற்பனை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதை அடுத்தே அஞ்சல் தொழில் சங்கத்தினர் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

இப்பொழுது போராட்டத்தில் சம்பள உயர்வுக் கோரிக்கையும் இடம்பிடித்துள்ளது. 

மேலதிக செய்திகள்: ருசாத்

அரச ஊழியர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்: ஜனவரி முதல் ஏற்படவுள்ள மாற்றம் - செய்திகளின் தொகுப்பு

அரச ஊழியர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்: ஜனவரி முதல் ஏற்படவுள்ள மாற்றம் - செய்திகளின் தொகுப்பு

இலங்கையில் பாடசாலை மாணவிகளின் ஆபத்தான பழக்கம் : பெற்றோர்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் பாடசாலை மாணவிகளின் ஆபத்தான பழக்கம் : பெற்றோர்களுக்கு எச்சரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW   


மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மறவன்புலோ, Wembley, United Kingdom

19 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US