தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பிற்கு மலையக பகுதியிலும் ஆதரவு
நாடளாவிய ரீதியில் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியால் முன்னெடுக்கப்படும் 48 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பிற்கு ஆதரவளிக்கும் முகமாக மத்திய மலைநாட்டு பகுதியிலுள்ள தபாலக ஊழியர்களும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கமைய, இன்றைய தினம் (08.07.2024) நுவரெலியா (Nuwara Eliya) மற்றும் நானுஓயா (Nanuoya) பிரதான தபாலக ஊழியர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இதன் காரணமாக, இவ்விரு பிரதான தபால் நிலையங்களிலும் கடித விநியோகம் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதுடன் ஏனைய சேவைகள் வழக்கம் போல் இயங்கி வருகின்றன.
சிரமத்தில் மக்கள்
அதேவேளை, கடித விநியோகம் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளமையால் அதிகமான கடிதங்கள் பிரதான தபால் நிலையங்களிலேயே வைக்கப்பட்டுள்ளன.
அத்துடன், சேவைக்கு ஏற்ப ஊழியர்கள் அலுவலகத்திற்கு சமூகமளிக்காமை காரணமாக தபால் நிலையங்களுக்கு சேவைகளை பெற வந்த மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




காணி நிலம் வேண்டும் பராசக்தி 3 நாட்கள் முன்

Optical illusion: உங்கள் கண்களுக்கு உயிர் உள்ளது எனில் இதில் இருக்கும் நேரான “28” எங்கே உள்ளது? Manithan

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சீதா, அருணை கண்டதும் முத்து செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam

இந்தியாவிற்கு சிக்கலை ஏற்படுத்தும் நகர்வு... வங்கதேசத்தில் ஆயுதங்களை தயாரிக்க துருக்கி முடிவு News Lankasri

மற்றொரு ஐரோப்பிய நாடு... 10,000 ரஷ்ய வீரர்கள்: பிரதமர் ஒருவர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் News Lankasri

மணிக்கு 12,300 கிமீக்கு மேல் வேகம்.., ரஷ்யாவின் RS-26 Oreshnik ஹைப்பர்சோனிக் ஏவுகணையின் விவரம் News Lankasri
