இலங்கை மக்களுக்கு இன்றைய தினத்தை விசேட தினமாக அறிவித்துள்ள அரசாங்கம்
இலங்கையில் இன்றைய தினத்தை விசேட தினமாக அறிவித்து, வாக்காளர்கள் அட்டைகள் விநியோகம் நடைபெறவுள்ளதாக பிரதி தபால்மா அதிபர் ராஜித கே.ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, இந்த பணிகளை இன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையில் முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் அட்டை
எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு பின்னர் வீடுகளுக்குச் சென்று வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் நிறுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தினங்களில் வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் எதிர்வரும் 18,19 மற்றும் 20ஆம் திகதிகளில் தங்களது பகுதிகளுக்கு பொறுப்பான தபால் அலுவலகத்துக்குச் சென்று தங்களது அடையாள அட்டையை காண்பித்து வாக்காளர் அட்டையை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிப்பது உறுதி : பிரித்தானியாவில் புலம்பெயர் தமிழர்கள் முன்னிலையில் சிறீதரன் எடுத்துரைப்பு

ஈரானை தாக்கிய இஸ்ரேல்... அமெரிக்காவை எச்சரிக்க சுவிஸ் தூதரை அழைத்த ஈரான்: காரணம் என்ன? News Lankasri

27 ஆண்டுக்கு முன்னர் நடந்த அதிசயம் - விமான விபத்தில் நடிகரின் உயிரை காப்பாற்றிய அதே 11A இருக்கை News Lankasri
