எதிர்க்கட்சித் தலைவர் பதவி தேர்தலின் பின்னர் அநுர வசம் : கிரியெல்ல எம்.பி
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தலைமையிலான தேசிய மக்கள் சக்தியே பெறும் என ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினரும் எதிரணி பிரதம கொறடாவுமான லக்சுமன் கிரியெல்ல(Lakshman Kiriella) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது, கிராமிய மட்டத்தில் சஜித்துக்கு ஆதரவு அலை வீசுகின்றது. தம்மை அவர் பார்த்துக்கொள்வார் என மக்கள் உறுதியாக நம்புகின்றனர்.
நாடாளுமன்றத் தேர்தல்
எனவே, உள்நாட்டில் சஜித்தின் வெற்றி உறுதியாகியுள்ளது. தேசிய மக்கள் சக்தி எமக்குச் சவாலாக அமையாது. ஆனாலும், மொட்டுக் கட்சியினரை விட கூடுதல் வாக்குகளைப் பெறுவார்கள்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குரிய வாக்கு வங்கியில் ஒரு பகுதி எமக்கும் வரும். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை தேசிய மக்கள் சக்தியே பெறும் என நம்புகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





மீனாவிற்கு புடவை எல்லாம் வாங்கிகொடுத்து செல்லம் என கொஞ்சம் விஜயா.. சிறகடிக்க ஆசை சீரியலில் என்ன தான் நடக்கிறது? Cineulagam

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் திடீர் மாற்றம்?... என்ன விஷயம் பாருங்க, ரசிகர்கள் வருத்தம் Cineulagam

ரூ.30,000 கோடி மதிப்புள்ள சோனா குழுமம்: கொலை செய்யப்பட்டாரா சஞ்சய் கபூர்? கடிதத்தால் வெடித்த சர்ச்சை! News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan
