கொழும்பு துறைமுகத்தில் பத்து வருடங்களாக தேங்கி கிடக்கும் கொள்கலன்கள்
கொழும்பு துறைமுகத்தில் பத்து (10) வருடங்களாக தேங்கி கிடக்கும் கொள்கலன்கள் தொடர்பில் அரசாங்கம் அவசர முடிவெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பத்து (10) வருடங்களாக 3000 கொள்கலன்கள் தொடர்பில் இலங்கை சுங்கத்திற்கு அதிகாரம் வழங்குவது தொடர்பில் அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.
அமைச்சர் எடுத்துள்ள நடவடிக்கை
அதிகமான இறக்குமதி, ஏற்றுமதி மற்றும் மறு ஏற்றுமதி காரணமாக துறைமுகத்தில் ஏற்படும் நெரிசலைக் குறைக்க உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் டாக்டர் அநுர கருணாதிலக்க அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது சுமார் 8,000 கொள்கலன்கள் அனுமதி பெற திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

புதிதாக நிறுவப்பட்ட புளூமெண்டல் யார்டுக்கு குறைந்த ஆபத்துள்ள கொள்கலன்களை அனுப்பவும், இலங்கை சுங்கத்தின் முழு மேற்பார்வையின் கீழ் அனுமதி நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
காமெனியின் படுகொலை... உலகம் மொத்தம் பீதியை ஏற்படுத்திய ஈரானிய மூத்த மதகுருவின் அழைப்பு News Lankasri
சிந்தாமணியால் சிக்கலில் சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
தங்களது மனைவியுடன் அய்யனார் துணை சீரியல் சகோதரர்கள்... என்ன செய்துள்ளார்கள் பாருங்க, கலாட்டா கன்பார்ம் Cineulagam