தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் மக்கள் மயப்படுத்தப்பட்ட அரசியலமைப்பு - செய்திகளின் தொகுப்பு
தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் மக்களுடன் கலந்துரையாடி, மக்கள் மயப்படுத்தப்பட்டதாகவே புதிய அரசியலமைப்பு கொண்டு வரப்படும் என்று அந்த கட்சியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நலிந்த ஜயதிஸ்ஸ (Nalintha Jayatissa) தெரிவித்துள்ளார்.
"அரசியலமைப்பை பலவந்தமாகத் திணிக்க முடியாது. அது தொடர்பில் மக்கள் மத்தியில் கலந்துரையாடல் மற்றும் மக்களின் ஆதரவு அவசியம். எனினும் இலங்கையில் சோல்பரி யாப்பு, 1972ஆம் குடியரசு யாப்பு மற்றும் 1978இல் புதிய அரசியலமைப்பு என்பன மக்களிடம் முறையாகக் கலந்துரையாடப்படாமல் கொண்டு வரப்பட்டவையாகும்.
எனவே, அனுர குமார திசாநாயக்க (Anura Kumara disssanayaka) தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் முதலாவது நாடாளுமன்ற ஆட்சிக் காலத்துக்குள் மக்கள் மயப்படுத்தப்பட்ட புதிய அரசியலமைப்பு முன்வைக்கப்படும்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்கி, நாடாளுமன்றத்துக்கு அதிகாரத்தைப் பகிரும் யோசனையும் உள்ளது" என தெரிவித்துள்ளார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam
