பாப்பரசர் லியோவின் அவசர கோரிக்கை.. ஜெலென்ஸ்கி வெளியிட்ட பதிவு
உடனடி போர்நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைக்கான அவசர வேண்டுகோளை பாப்பரசர் லியோ XIV மீண்டும் வலியுறுத்துவதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில், குறித்த அவசர போர்நிறுத்த அழைப்புக்கு நன்றி தெரிவித்து உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
போர்நிறுத்தம்..
இது தொடர்பில் எக்ஸ் தளத்தில் ஜெலென்ஸ்கி வெளியிட்டுள்ள பதிவில், "உடனடி போர்நிறுத்தத்திற்கான பாப்பரசர் லியோ புனிதரின் அழைப்பை நாங்கள் முழுமையாகப் பகிர்ந்து கொள்கிறோம்.
மேலும் போரை முடிவுக்குக் கொண்டுவரவும், ராஜதந்திரத்தை செயல்படுத்தவும் உண்மையான நடவடிக்கைகளை எடுக்க ரஷ்யாவை வலியுறுத்துகிறோம்.
ரஷ்யா தான் தொடங்கிய போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும், முடிவுக்குக் கொண்டுவர மறுக்கிறது.
Grateful to @Pontifex for this forceful appeal to stop the war and murders.
— Volodymyr Zelenskyy / Володимир Зеленський (@ZelenskyyUa) August 31, 2025
We fully share His Holiness’s call for an immediate ceasefire and urge Russia to take real steps to end the killing and enable diplomacy. Russia must end the war it began and refuses to end.
It is… https://t.co/5kISWcyF0S
மனித உயிரை மதிக்கும் உலகில் உள்ள அனைவரும் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்து அர்த்தமுள்ள அமைதிச் செயல்பாட்டில் ஈடுபட மாஸ்கோவை கட்டாயப்படுத்த அழுத்தம் கொடுப்பது மிகவும் முக்கியம்” என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



