கிறிஸ்துமஸ் செலவுகளை குறைத்து உக்ரைன் மக்களுக்கு உதவ வேண்டும்: போப் பிரான்சிஸ் வேண்டுகோள்
உக்ரைன் போர் தொடங்கி பத்து மாதங்களுக்கு மேலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த போரால் இரு தரப்பிலும் ஏராளமான இராணுவ வீரர்கள் மற்றும் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
போரை உடனே நிறுத்த வேண்டும்
இந்த போரை உடனே நிறுத்த வேண்டும் என போப் பிரான்சிஸ் தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் அனைத்திலும் வலியுறுத்தி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று நடந்த கூட்டத்தில் போப் பிரான்சிஸ் தெரிவித்ததாவது, போரால் பாதிக்கப்பட்ட உக்ரைன் மக்கள் கடும் குளிரிலும், பசியாலும் வாடி வருகிறார்கள். அவர்கள் இதயங்களில் அமைதியும், மகிழ்ச்சியும் ஏற்படும் வகையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் அமைய வேண்டும்.
அனைவரும் கிறிஸ்துமஸ் பண்டிகை செலவுகளை குறைத்துக்கொண்டு உக்ரைன் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என போப் பிரான்சிஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

பிறந்து 15 நாள் ஆன குழந்தையை ஃப்ரிட்ஜில் வைத்த தாய்.., பின்னால் இருக்கும் அதிர்ச்சி காரணம் News Lankasri

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
