பொது நிகழ்ச்சிகளில் பேசுவதை தவிர்த்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ்
கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக உள்ள திருத்தந்தை பிரான்சிஸ் பொது நிகழ்ச்சிகளில் பேசுவதை தவிர்த்து வருகிறார்.
சில நாட்களுக்கு முன்னர் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், சுவாசிப்பதில் சிக்கல் இருப்பதாக கூறி நிகழ்ச்சிகளில் பேசுவதை திருத்தந்தை பிரான்சிஸ் தவிர்த்து வருகிறார்.
86 வயதாகும் திருத்தந்தை பிரான்சிஸ் உலகம் முழுவதும் இருக்கும் கத்தோலிக்க மத நம்பிக்கையாளர்களின் குருவாக திகழ்கிறார்.
அறுவை சிகிச்சை
இந்நிலையில் அவரது குடல் சுருங்கியதால் அதன் முனையில் தொற்று ஏற்பட்டதுடன் இவருக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு பெருங்குடல் அறுவை சிகிச்சை ஒன்று செய்யப்பட்டது.
இதனையடுத்து செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் வழக்கமாக நடைபெறும் ஞாயிறு தின கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.
இதன்போது அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
மேலும், கிரீஸ் நாட்டில் நடந்த படகு விபத்தையும் நினைவு கூர்ந்து, உகாண்டா பாடசாலையில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தையும் கண்டித்துள்ளார்.
அருட்தந்தை பிரான்சிஸின் அறிவிப்பு
இந்த உரைக்கு பின்னர் அடுத்தடுத்த உரைகளை திருத்தந்தை பிரான்சிஸ் தவிர்த்து வருகிறார்.
நேற்று(22.06.2023) காலை நடைபெற்ற ஒரு மாநாட்டில் இவர் பேசுவதாக திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், சுவாசிப்பதில் சிரமம் இருப்பதாக கூறி திருத்தந்தை பிரான்சிஸ் இந்த உரையாடலை தவிர்த்துவிட்டார்.
இது குறித்து அவர் கூறுகையில், "நான் இன்னும் மயக்க மருந்துகளின் விளைவுகளிலிருந்து முழுமையாக வெளிவரவில்லை. எனது சுவாசம் இயல்பாக இல்லை" என்று கூறியுள்ளார்.
திருத்தந்தை பிரான்சிஸின் இந்த அறிவிப்பு கத்தோலிக்க மத நம்பிக்கையாளர்களிடம் மீண்டும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

அடுத்த வாரம் கண்டிப்பாக சம்பவம் இருக்கு, முத்துவிடம் சிக்கிய ரோஹினி.. சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam
